15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

உ.பி.யில் ரௌடியும், அரசியல்வாதியுமான முக்தார் அன்சாரி மரணம் விவகாரத்தில் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக குடும்பத்தார் புகார்.

News image
Updated On :29 மார்ச் 2024, 8:13 am

பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவரும், அரசியல்வாதியுமான முக்தார் அன்சாரி மருத்துவமனையில் மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், அவருக்கு உணவில் சிறிது சிறிதாக விஷம் வைக்கப்பட்டதாக குடும்பத்தார் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆனால், அவர் மாரடைப்பால்தான் மரணம் அடைந்ததாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த முக்தார் அன்சாரி, மயக்கமுற்ற நிலையில், வியாழக்கிழமை இரவு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி பலியானதாகக் கூறப்படுகிறது. அவரை சிறைத் துறை அதிகாரிகள் விஷம் வைத்துக் கொன்றுவிட்டதாக குடும்பத்தார் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

முக்தார் அன்சாரி, ஒரு கொலைக் குற்றவாளி. இவர் ஐந்து முறை மௌ சடார் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர். இவர் மீது 60 குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன. கடந்த 2005ஆம் ஆண்டு முதல் இவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.