தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

எஸ்பிஐ-யின் நடவடிக்கையில் திருப்தியில்லை: உச்ச நீதிமன்றம்

எஸ்பிஐ-யின் நடவடிக்கையில் திருப்தியில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

News image

உச்ச நீதிமன்றம்

Updated On :18 மார்ச் 2024, 5:30 am

புது தில்லி: தேர்தல் நன்கொடை பத்திரங்கள் விவகாரத்தில் எஸ்பிஐ-யின் நடவடிக்கையில் திருப்தியில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

தேர்தல் நன்கொடை பத்திர திட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும் இப்பத்திரங்கள் விநியோகம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பிக்கவும், அதனை தேர்தல் ஆணையம், தனது வலைதளத்தில் மார்ச் 15ஆம் தேதிக்குள் வெளியிடவும் மார்ச் 11ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

எஸ்பிஐ வெளியிட்ட தேர்தல் நன்கொடை பத்திர விவரத்தில் பத்திர வரிசை எண் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில், தேர்தல் பத்திர வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி ஜே.பி.பார்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது

அப்போது, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான எஸ்பிஐ நடவடிக்கை திருப்தியளிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.

இதற்கு பதிலளித்த எஸ்பிஐ வங்கி தரப்பு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை நாங்கள் புரிந்துகொண்டதன் அடிப்படையிலேயே தரவுகள் அளிக்கப்பட்டுள்ளது என்று வாதம் முன் வைக்கப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதிகள், அனைத்து தரவுகளையும் வெளியிட வேண்டும் என்று முதல் உத்தரவிலேயே தெளிவாக கூறப்பட்டுள்ளது. அனைத்து தரவுகளையும் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டும் எஸ்பிஐ ஏன் தேர்தல் பத்திர வரிசை எண்களை வெயிடவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறது.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்போதும், தேர்தல் பத்திர விவரங்களை முழுமையாக வெளியிடாடது ஏன்? தேர்தல் பத்திர பிரத்யேக(வரிசை) எண்களை வெளிடாதது ஏன்? தேர்தல் பத்திரங்கள் எந்த தேதியில் வழங்கப்பட்டது?, யாரால் வழங்கப்பட்டது?, யாரால் பணமாக்கப்பட்டது? என அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.