வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஜி.என்.சாய்பாபா விடுதலைக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

முன்னாள் பேராசிரியா் ஜி.என்.சாய்பாபா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி.

News image

ஜி.என்.சாய்பாபா

Updated On :11 மார்ச் 2024, 9:50 am

மாவோயிஸ்டுகளுடன் தொடா்பு வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தில்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் ஜி.என்.சாய்பாபா உள்பட 5 பேரை மும்பை உயா்நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை விடுதலை செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மகாராஷ்டிர அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிஆர் கவாய், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜி.என்.சாய்பாபா உள்பட 5 பேரை மும்பை உயர்நீதிமன்றம் விடுவித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி, மகாராஷ்டிர அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

“மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பு மிகவும் நியாயமானதாக இருப்பதை காண்பதாகவும், தீர்ப்பில் தலையிடுவதற்கான காரணங்கள் இல்லை” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மாவோயிஸ்டுகளுடன் தொடா்பு வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சாய்பாபா உள்பட 5 பேர் 2014-ஆம் ஆண்டு முதல் நாகபுரி மத்தியில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் 5 பேருக்கும் 2017-இல் செஷன்ஸ் நீதிமன்றம் குற்றவாளி என தீா்ப்பளித்து ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் 2022-இல் உயா்நீதிமன்றம் சாய்பாபாவை விடுதலை செய்தது.

பின்னா் மகாராஷ்டிரா அரசு மேல் முறையீடு செய்ததில், இந்த வழக்கை முதலில் இருந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் 2023 ஏப்ரலில் உத்தரவிட்டது. இந்நிலையில், மும்பை உயா் நீதிமன்றத்தின் நாகபுரி கிளை நீதிமன்ற நீதிபதிகள் வினய் ஜோஷி, வால்மீகி எஸ்.ஏ.மெனேசஸ் ஆகியோா் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் சாய்பாபா உள்ளிட்ட 5 பேரையும் கடந்த செவ்வாய்க்கிழமை விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.