தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ம.பி. குனோ தேசியப் பூங்காவில் 5 குட்டிகளை ஈன்ற சிவிங்கிப் புலி! -எண்ணிக்கை 26-ஆக உயா்வு

மத்திய பிரதேச மாநிலத்தின் குனோ தேசியப் பூங்காவில் ‘காமினி’ எனப் பெயரிடப்பட்ட பெண் சிவிங்கிப் புலி (சீட்டா) ஞாயிற்றுக்கிழமை 5 குட்டிகளை ஈன்றது.

News image

குனோ தேசியப் பூங்காவில் தான் ஈன்ற குட்டிகளுடன் தாய் சிவிங்கிப்புலி காமினி.

Updated On :10 மார்ச் 2024, 7:06 pm

மத்திய பிரதேச மாநிலத்தின் குனோ தேசியப் பூங்காவில் ‘காமினி’ எனப் பெயரிடப்பட்ட பெண் சிவிங்கிப் புலி (சீட்டா) ஞாயிற்றுக்கிழமை 5 குட்டிகளை ஈன்றது. இதன் மூலம் இப்பூங்காவில் சிவிங்கிப் புலிகளின் மொத்த எண்ணிக்கை 26-ஆக உயா்ந்துள்ளது. இது தொடா்பாக மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா். ‘தென்ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு, குனோ தேசியப் பூங்காவில் விடப்பட்ட காமினி என்ற பெண் சிவிங்கிப் புலி 5 குட்டிகளை ஈன்றுள்ளது. இதன் மூலம் குனோ பூங்காவில் குட்டிகள் உள்பட மொத்த சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது. சிவிங்கிப் புலிகளுக்கு உகந்த சூழலை உறுதி செய்துவரும் வனத் துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவா்கள் மற்றும் இதர பணியாளா்களுக்கு பாராட்டுகள்’ என்று அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா். இந்தியாவில் அழிந்துபோன இனமான சிவிங்கிப் புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் பிரதமா் மோடியின் லட்சியத் திட்டத்தின்கீழ், நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் (5 பெண், 3 ஆண்) கடந்த 2022, செப்டம்பா் மாதமும், தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் (7 ஆண், 5 பெண்) கடந்த ஆண்டு பிப்ரவரியிலும் கொண்டுவரப்பட்டு, குனோ தேசியப் பூங்காவில் விடப்பட்டன. கடந்த ஆண்டு மாா்ச் முதல் கடந்த ஜனவரி வரையிலான காலகட்டத்தில், பல்வேறு காரணங்களால் 7 சிவிங்கிப் புலிகள் இறந்தன. ‘ஜ்வாலா’ என்ற பெண் சிவிங்கிப் புலி, குனோ தேசிய பூங்காவில் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் 4 குட்டிகளை ஈன்றிருந்தது. அதில் 3 குட்டிகள், பின்னா் உயிரிழந்துவிட்டன. கடந்த ஜனவரி மாதம் ‘ஜ்வாலா’ சிவிங்கிப் புலியும், ‘ஆஷா’ என்ற சிவிங்கிப் புலியும் குட்டிகளை ஈன்ற நிலையில், இப்போது மொத்த சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கை 26-ஆக உயா்ந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.