மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பிணை மனுக்கள் அவசியமின்றி ஒத்திவைக்கப்படக் கூடாது: உச்ச நீதிமன்றம்

பிணை மனுக்கள் தேவையில்லாமல் ஒத்திவைக்கப்படக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு

News image

உச்ச நீதிமன்றம்

Updated On :25 ஜூன் 2024, 10:33 am

புது தில்லி; பிணை மனுக்கள் மீதான விசாரணை தேவையில்லாமல் ஒத்திவைக்கப்படக் கூடாது என்று அறிவுறுத்தியிருக்கும் உச்ச நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சார்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது அடுத்த விசாரணையின்போது முடிவெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

பண மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆத் ஆத்மியைச் சேர்ந்த முன்னாள் தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் ஜாமீன் மனு மீது ஜூலை 9ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு, சத்யேந்தர் ஜெயினின் ஜாமீன் மனுவை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்யும்போது உச்ச நீதிமன்றம் இந்த கருத்தை வலியுறுத்தியிருந்தது.

ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்கள் அவசியமின்றி ஒத்திவைக்கப்படக் கூடாது, அடுத்த விசாரணையின்போது, உயர் நீதிமன்றம் இது குறித்து உரிய முடிவெடுக்கும் என்று நம்புவதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சத்யேந்தர் ஜெயின் ஜாமீன் மனு வரும் ஜூலை 9ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.