மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்த சட்டம் கொண்டுவரப்படும்: அதிஷி

அதிகாரிகள் யாரேனும் தவறு செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

News image

அமைச்சர் அதிஷி - Center-Center-Delhi

Updated On :31 ஜூலை 2024, 6:12 am

தில்லியில் உள்ள பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தைத் தில்லி அரசு கொண்டுவரும் என்று அமைச்சரவை அமைச்சர் அதிஷி தெரிவித்தார்.

செய்தியாளர்களுடன் உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,

சட்டத்தை உருவாக்க அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு பயிற்சி மையங்களைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும்.

இந்தச் சட்டத்தில் உள்கட்டமைப்பு, ஆசிரியர்களின் தகுதி, கட்டணக் கட்டுப்பாடு மற்றும் தவறான விளம்பரங்களைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள் இருக்கும். இதுதொடர்பாக பொதுமக்களின் கருத்தும் கேட்கப்படும் என்றார்.

தில்லி மாநகராட்சி சட்டங்களை மீறி அடித்தளங்களைப் பயன்படுத்தும் பயிற்சி மையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. ராஜிந்தர் நகர், முகர்ஜி நகர், லக்ஷ்மி நகர், ப்ரீத் விஹார் ஆகிய இடங்களில் உள்ள 30 பயிற்சி மையங்களின் அடித்தளங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 200 பயிற்சி மையங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

பழைய ராஜிந்தர் நகர் சம்பவம் தொடர்பான நீதிபதி விசாரணை அடுத்த 6 நாள்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இந்த சம்பவத்தில் அதிகாரிகள் யாரேனும் தவறு செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டவிரோத கட்டட பயன்பாடு ராஜிந்தர் நகர் சோகத்திற்கு வழிவகுத்ததாகவும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.