மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மத்திய அரசிடம் ரூ.24,000 கோடி சிறப்பு நிதியுதவி கோரிய கேரளம்

கேரள மாநில நிதியமைச்சர், மத்திய அரசிடம் ரூ.24,000 கோடி சிறப்பு நிதியுதவி கோரி கடிதம் எழுதியிருக்கிறார்.

News image

சிறப்பு நிதி - கேரளம் - pti

Updated On :30 ஜூலை 2024, 10:24 am

புது தில்லி: ரூ.24,000 கோடி சிறப்பு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கேரள அரசு சார்பில் கடந்த மாதம் கோரியிருந்ததாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் இன்று, நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌதரி அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இன்று அளித்த பதிலில், ஆந்திர மாநிலம், மாநில தலைநகர் அமராவதி மேம்பாட்டுக்காக ரூ.15,000 கோடி நிதி கோரியிருப்பதாகவும், பல்வேறு திட்டப் பணிகளுக்காக ரூ.17,144 கோடி கேட்டிருப்பதாகவும் அறிவித்தார்.

பிகார் மாநிலம், மாநில திட்டப் பணிகளை மேற்கொள்ள ரூ.785 கோடி கேட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுளள்து.

அதாவது, கேரள நிதியமைச்சர், கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதியிட்டு மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், கேரளத்துக்கு ரூ.24,000 கோடி சிறப்பு நிதியாக கோரியிருந்தது என்று மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.