தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

நாட்டில் 50% அரசு மருத்துவர்களின் பரிந்துரைகள் விதிமுறைப்படி இல்லை: ஆய்வு

நாட்டில் புறநோயாளிகள் பிரிவில், 50 சதவீத அரசு மருத்துவர்களின் பரிந்துரைகள் விதிமுறைப்படி இல்லை என்று ஆய்வு தெரிவிக்கிறது.

News image

மருத்துவமனை (கோப்புப்படம்)

Updated On :22 ஜூலை 2024, 11:24 am

!

புது தில்லி: நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்களின் பரிந்துரைகள் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இருப்பதில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

சஃப்தர்ஜங்கில் உள்ள எய்ம்ஸ் உள்ளிட்ட நாட்டின் மிக முன்னணி அரசு மருத்துவமனைகளில் இருக்கும் பாதி மருத்துவர்களின் பரிந்துரைகள், தரமான சிகிச்சைக்குரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இருப்பதில்லை என்ற ஆய்வு முடிவு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சைக்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்றியிருக்காவிட்டாலும், அது பெரும்பாலும் நோயாளிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது, மேலும், 10 சதவீத மருத்துவப் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இருப்பதாகவும், சில மருந்துகள் ஒன்றோடு ஒன்று பொருந்தாதவை, பொறுப்பில்லாத வகையில், சிகிச்சைக்கான செலவை அதிகரிப்பதாக, அதிக பக்கவிளைவுகளைக் கொண்டதாகவும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில நோய்களுக்கு, மருத்துவர்கள் இருவேறுவிதமான ஆண்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைப்பதை இங்கு உதாரணமாக கூறுகிறார்கள். அவ்வாறு இரண்டு ஆண்டிபயாடிக்குகளை பரிந்துரைக்கும்போது, அதனை எடுத்துக்கொள்ளும் நோயாளிக்கு, ஆண்டிபயாடிக் தடுப்புச் சந்தி ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், சிகிச்சைக்கான செலவு அதிகரிக்கும், இதுதான் ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலான மருத்துவப் பரிந்துரையாக உள்ளது. ஏற்றுக்கொள்ளக்கூடிய பரிந்துரையாக இருப்பது, மருந்துகளின் தொடர்ச்சியின்மை, மருந்துகளின் அளவில் மாறுபாடு, எடுத்துக்கொள்ளும் காலம், ஒருநாளைக்கு எத்தனை முறை எவ்வளவு மருந்து எடுத்துக்கொள்வது என்பதில் தவறான அளவீடுகளை நோயாளிகளுக்கு பரிந்துரைப்பதாகும்.

நாடு முழுவதுமிருக்கும் பல்வேறு மருத்துவமனைகளில், புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் அளித்த 4,838 பரிந்துரைகள் இந்த ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. மருந்துகளை பரிந்துரைத்த மருத்துவர்களில் அனைவருமே தங்களது துறையில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள், சராசரியாக நான்கு முதல் 18 ஆண்டுகள் மருத்துவத் துறையில் அனுபவம் பெற்றவர்களாக இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.