தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஹிமாசலில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 எம்எல்ஏக்கள் பதவியேற்பு!

கமலேஷ் தாக்குர் உள்பட புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

News image

பதவியேற்றுக்கொண்ட எம்எல்ஏக்கள்

Updated On :22 ஜூலை 2024, 10:54 am

முதல்வர் சுகவிந்தர் சிங் சுகுவின் மனைவி கமலேஷ் தாக்குர் உள்பட புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

ஹிமாசலப் பிரதேச விதான்சபா தலைவர் குல்தீப் சிங் பதானியா புதிதாகத் தேர்வான எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது.

டெஹ்ரா சட்டமன்ற தொகுதியில் இருந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கமலேஷ் தாக்கூர், நலகர் தொகுதியிலுந்து ஹர்தீப் சிங் பாவா மற்றும் ஹமீர்பூர் தொகுதியில் பாஜக உறுப்பினர் ஆஷிஷ் சர்மா ஆகியோர் பதவியேற்ற உறுப்பினர்கள் ஆவர்.

மூன்று எம்.எல்.ஏக்கள் பதவியேற்ற நிலையில், 68 உறுப்பினர்களுடன் அவை நிரம்பியது. அதில் காங்கிரஸின் பலன் 40 ஆகவும், பாஜகவின் பலம் 28 ஆகவும் உள்ளது. ஹிமாலப் பிரதேச வரலாற்றில் ஹிமாச்சலப் பிரதேச வரலாற்றில் முதல்முறையாக விதான்சபாவில் சுயேச்சை எம்எல்ஏக்கள் இல்லை.

மேலும், முதல்வர் சுகு மற்றும் அவரது மனைவி கமலேஷ் தாக்குர் தம்பதியினர் ஒரே அவையில் உறுப்பினர்களாக இருப்பது இதுவே முதல் முறை.

மூன்று சுயேச்சை எம்எல்ஏக்களான ஹோஷியார் சிங், கே.எல். தாக்கூர் மற்றும் ஆஷிஷ் ஷர்மா ஆகியோரின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, டேஹ்ரா, நலகர் மற்றும் ஹமீர்பூர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜூலை 10 அன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.