ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

கேஜரிவால் சிறையில் குறைந்த கலோரிகளை எடுத்துக் கொள்கிறார்: துணைநிலை ஆளுநர்

பரிந்துரைக்கப்பட்ட உணவை முழுமையாக உட்கொள்ளாததே அவரின் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது..

News image

வி.கே.சக்சேனா

Updated On :20 ஜூலை 2024, 7:26 am

நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் உடல்நிலை குறித்து தலைமைச் செயலளர் நரேஷ் குமாருக்கு துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில்,

கேஜரிவாலின் உடல்நிலை குறித்து சிறை கண்காணிப்பாளர் அளித்த அறிக்கையை மேற்கொள் காட்டிய அவர், வீட்டில் சமைத்த உணவு போதுமான அளவு வழங்கப்பட்ட போதிலும், முதல்வர் வேண்டுமென்றே மருந்துகளை உட்கொள்ளாமல் குறைந்த கலோரி உணவுகளை உட்கொள்ளுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

டைப்-II நீரிழிவு நோய் கொண்டிருப்பதால், குறிப்பிட்ட உணவைத் தவிரப் பரிந்துரைக்கப்பட்ட மருந்து மற்றும் இன்சுலின் அளவைக் கடைப்பிடிக்குமாறு முதல்வருக்கு அறிவுறுத்தலாம் என்று சிறை அதிகாரிகளுக்கு சக்சேனா பரிந்துரைத்துள்ளார்.

சிறையில் உள்ள கேஜரிவாலின் உடல்நிலைக்கு நிரந்தர கேடு விளைவிப்பதற்காக பாஜகவும், மத்திய அரசும் சதி செய்வதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. கேஜரிவால் ரத்த சர்க்கரை அளவு குறைந்த நிலையில், அவர் கோமா நிலைக்குச் சென்று, அவரின் மூளை பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கட்சி கூறியுள்ளது.

கடந்த ஜூன் 6 முதல் 13 வரை, முதல்வர் ஒரு நாளைக்கு மூன்று வேளையும் பரிந்துரைக்கப்பட்ட உணவை முழுமையாக உட்கொள்ளவில்லை என்று உணவு கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேஜரிவால் சிறைக்கு வரும்போது 63.5 கிலோவாகவும், தற்போது 61.5 கிலோவாகவும் குறைந்ததாகக் கூறப்படுகிறது. குறைந்த கலோரி உட்கொண்டதே இதற்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் சரிவர இன்சுலின் செலுத்திக்கொள்ளாததும் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்துள்ளதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டும், சிபிஐ கைது செய்த நிலையில் அரவிந்த் கேஜரிவால் வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.