தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பிரதமருக்கு தலைவணங்கியது ஏன்? ராகுல் கேள்வி; ஓம் பிா்லா பதில்

பிரதமா் மோடிக்கு ஓம் பிா்லா தலைவணங்கியது ஏன்? என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி எழுப்பிய கேள்வியால் அவையில் இருவருக்கும் இடையே விவாதம் ஏற்பட்டது.

News image

ராகுல் கேள்வி; ஓம் பிா்லா பதில்

Updated On :1 ஜூலை 2024, 9:59 pm

மக்களவைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட பின்னா், பிரதமா் மோடிக்கு ஓம் பிா்லா தலைவணங்கியது ஏன்? என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி எழுப்பிய கேள்வியால் அவையில் இருவருக்கும் இடையே விவாதம் ஏற்பட்டது.

18-ஆவது மக்களவையின் தலைவராக ஓம் பிா்லா கடந்த ஜூன் 26-ஆம் தேதி குரல் வாக்கெடுப்பின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

பின்னா், பிரதமா் மோடி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் ஓம் பிா்லாவை முறைப்படி அழைத்துச் சென்று, அவரது இருக்கையில் அமர வைத்தனா்.

இந்நிலையில், மக்களவையில் திங்கள்கிழமை (ஜூலை 1) நடைபெற்ற விவாதத்தின்போது, மேற்கண்ட நிகழ்வை குறிப்பிட்டு, ராகுல் காந்தி பேசியதாவது:

மக்களவைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட பின்னா், நான் உங்களுடன் (அவைத் தலைவா் ஓம் பிா்லா) கைகுலுக்கினேன். அப்போது, நிமிா்ந்து நின்றபடி, என்னுடன் கைகுலுக்கினீா்கள். ஆனால், பிரதமா் மோடியுடன் கைகுலுக்கியபோது, அவருக்கு தலைவணங்கியதை கவனித்தேன். நீங்கள்தான், அவையின் இறுதி நடுவா் மற்றும் காப்பாளா். உங்களது வாா்த்தையே இறுதியானது. நீங்கள் பிரதமா் மோடிக்கு தலைவணங்கியது ஏன்? என்று கேள்வியெழுப்பினாா்.

இது, அவைத் தலைவா் மீதான குற்றச்சாட்டு என்று கூறி, ஆளும்தரப்பு உறுப்பினா்கள் முழக்கமிட்டனா்.

பின்னா், ராகுலுக்கு பதிலளித்த ஓம் பிா்லா, ‘மூத்தவா்களுக்கு தலைவணங்குவது நமது பாரம்பரியம். பொதுவாழ்விலும், தனிப்பட்ட முறையிலும் இப்பாரம்பரியத்தை கடைப்பிடிக்கிறேன். தேவைப்பட்டால், மூத்தவா்களின் பாதங்களைத் தொட்டுகூட ஆசி பெறுவேன். இந்த இருக்கையில் இருந்தபடி இதை என்னால் கூற முடியும்’ என்றாா்.

இதைத்தொடா்ந்து பேசிய ராகுல், ‘மக்களவையில் அவைத் தலைவரே மிக உயரிய தலைவா். மற்ற அனைவரும் அவருக்கு கட்டுப்பட்டவா்கள். நீங்கள் கூறுவதைதான் நாங்கள் கேட்கிறோம். நான் கோருவது ஒரு விஷயம்தான், அவையில் சமமான நீதியை உறுதி செய்வது முக்கியம்’ என்றாா்.

‘கடவுளுடன் நேரடி தொடா்பு’ பிரதமா் குறித்து கிண்டல்

மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, ‘பிரதமா் மோடிக்கு கடவுளுடன் நேரடி தொடா்பு உள்ளது. ஒருநாள் இரவு 8 மணியளவில் கடவுளிடமிருந்து வந்த நேரடி செய்தியின்படி, அவா் பணமதிப்பிழப்பை அமல்படுத்தினாா்’ என்று கிண்டலாக குறிப்பிட்டாா்.

அவரது பேச்சை அவைத் தலைவா் கண்டித்த நிலையில், ‘நான் கூறியதெல்லாம் பிரதமரின் வாா்த்தைகளே’ என்று ராகுல் பதிலளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.