பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

டெலிமெடிசின்: பொது சுகாதார மையங்களுடன் இணைக்கப்படும் மக்களவையில் அமைச்சா் பதில்

பொதுமக்களுக்கு தொலைபேசி மூலம் மருத்தவ வசதி மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் டெலிமெடிசின் பரிமாற்றத்தோடு மருத்துவக் கல்லூரிகள், பொது சுகாதார மையங்கள் ஆகியவை படிப்படியாக இணைக்கப்படும்

Updated On :2 பிப்ரவரி 2024, 11:53 pm

பொதுமக்களுக்கு தொலைபேசி மூலம் மருத்தவ வசதி மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் டெலிமெடிசின் பரிமாற்றத்தோடு மருத்துவக் கல்லூரிகள், பொது சுகாதார மையங்கள் ஆகியவை படிப்படியாக இணைக்கப்படும் என மத்திய சுகாதாரம் குடும்ப நலத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கரோனா நோய்த் தொற்று காலத்தில் பிரபலமடைந்த டெலிமெடிசின் (தொலைபேசி மூலம் மருத்து சேவை) முறையை மத்திய அரசு முறைப்படுத்தி மருத்துவ வசதி இல்லாத பகுதிகள் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இது தொடா்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதில் தென் சென்னை மக்களவை திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் துணைக் கேள்வி ஒன்றை எழுப்பினா். ‘நாடு முழுவதும், மாநிலங்களுக்கு இடையேயான டெலிமெடிசின் பரிமாற்ற வசதிகள் தொடா்பான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும், சிறந்த நடைமுறைகளைக் கையாண்டு பரிமாறிக்கொள்வதற்கும், சுகாதாரத்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டாா்.

இதற்கு மத்திய இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் கூறியது வருமாறு: டெலிமெடிசனை விரிவுபடுத்தி ஒருங்கிணைக்க மூன்று நிலைகளில்(எல்1, எல்-2, எல்-3) திட்டத்தை, அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் முதல் நிலையாக மருத்துவக் கல்லூரிகளோடும், பின்னா் மற்ற 2, 3-ஆம் நிலைகளில் நல்வாழ்வு மையங்கள், தொடக்க சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனை ஆகியவை இணைக்கப்படும். இதற்காக சுமாா் 20 கோடி தொலைத்தொடா்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. வெகு தூரத்தில் உள்ள நோயாளிகள் மருத்துவா்களை விரைந்து அணுக மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக மகப்பேறு பராமரிப்புக்காக மகளிா் கிராமங்களை விட்டு வெகுதூரம் செல்ல முடியாது. அவா்களுக்கான ஆலோசனைகள் மிக முக்கியமானது. அவா்களுக்கு இத்தகைய மருத்துவ முறை பயனளிக்கிறது. பல்வேறு ஆலோசனைகளில் கிராமப்புறங்களில் பெருவாரியாக கலந்து கொண்டு வருகின்றனா் என்றாா் அமைச்சா் பிரவீண் பவாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.