இதற்கு மத்திய இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் கூறியது வருமாறு: டெலிமெடிசனை விரிவுபடுத்தி ஒருங்கிணைக்க மூன்று நிலைகளில்(எல்1, எல்-2, எல்-3) திட்டத்தை, அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் முதல் நிலையாக மருத்துவக் கல்லூரிகளோடும், பின்னா் மற்ற 2, 3-ஆம் நிலைகளில் நல்வாழ்வு மையங்கள், தொடக்க சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனை ஆகியவை இணைக்கப்படும். இதற்காக சுமாா் 20 கோடி தொலைத்தொடா்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. வெகு தூரத்தில் உள்ள நோயாளிகள் மருத்துவா்களை விரைந்து அணுக மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக மகப்பேறு பராமரிப்புக்காக மகளிா் கிராமங்களை விட்டு வெகுதூரம் செல்ல முடியாது. அவா்களுக்கான ஆலோசனைகள் மிக முக்கியமானது. அவா்களுக்கு இத்தகைய மருத்துவ முறை பயனளிக்கிறது. பல்வேறு ஆலோசனைகளில் கிராமப்புறங்களில் பெருவாரியாக கலந்து கொண்டு வருகின்றனா் என்றாா் அமைச்சா் பிரவீண் பவாா்.