ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

இந்தியாவுக்கு எதிரான பதிவுகளுக்கு லைக் போட்ட வங்கதேச மாணவி: திருப்பி அனுப்பப்பட்டார்!

இந்தியாவுக்கு எதிரான பதிவுகளுக்கு லைக் போட்ட வங்கதேச மாணவி சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்!

News image

என்ஐடி - Center-Center-Hyderabad

Updated On :27 ஆகஸ்ட் 2024, 6:33 am

குவகாத்தி: அசாம் மாநிலம் சில்சாரில் அமைந்துள்ள தேசிய கல்வி மையத்தில் படித்து வந்த வங்கதேச மாணவி, சமூக வலைதளங்களில் இந்தியாவுககு எதிரான பதிவுகளுக்கு லைக் போட்ட காரணத்தால், சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்கதேசத்தைச் சேர்ந்த மாணவி, கடந்த 2021ஆம் ஆண்டு சில்சாரில் உள்ள என்ஐடியில் சேர்ந்து படித்து வந்தார். இவர், முகநூலில், இந்தியாவுக்கு எதிரான பதிவுகளுக்கு தொடர்ந்து லைக் பதிவிட்டு வந்துள்ளார்.

இந்த விவகாரம், கடந்த வாரம் சில்சார் அசாம் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் மூலம் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. வங்கதேச மாணவியின் சமூக ஊடகப் பதிவுகள் குறித்து ஸ்கிரீன் ஷாட்கள் பகிரப்பட்டு, அவரது நடவடிக்கைகள் புகாராக எழுந்தன.

இதையடுத்து, அந்த மாணவி, நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. திங்கள்கிழமை காலை, அவர் இந்தியா - வங்கதேச சர்வதேச எல்லையான கரீம்கஞ்ச் பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டார். அவர் முழு பாதுகாப்புடன் இந்திய எல்லையைக் கடந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவர் சொந்த நாடு திரும்ப விருப்பம் தெரிவித்திருந்ததாக, என்ஐடி தெரிவித்திருந்தது. இதே என்ஐடியில் சுமார் 70 வங்கதேச மாணவ, மாணவிகள் பல்வேறு பாடங்களில் படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.