தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

இந்துக்கள் காரணமின்றி வன்முறையை எதிர்கொள்கின்றனர்: மோகன் பாகவத்!

இந்தியா மற்றவர்களுக்கு உதவும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.

News image

மோகன் பாகவத்

Updated On :15 ஆகஸ்ட் 2024, 6:57 am

வங்கதேசத்தில் இந்து சிறுபான்மை சமூகத்தின் மீது குறிவைக்கப்பட்ட தாக்குதல்களுக்கு மத்தியில், அங்கு வாழும் இந்துக்கள் எந்த காரணமும் இல்லாமல் வன்முறைக்கு ஆளாகின்றனர், நம் நாடு அவர்களின் நலனை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.

சுதந்திர தினத்தையொட்டி மகால் பகுதியில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து அவர் பேசினார்.

வரவிருக்கும் தலைமுறைக்கு சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது. ஏனென்றால் உலகில் எப்போதும் மற்ற நாடுகளில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் மக்கள் உள்ளனர். அவர்கள் மத்தியில் நாம் எப்போதும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். அவர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

எல்லா நேரத்திலும் இதே நிலைமை நீடிக்காது. ஏற்ற தாழ்வுகள் தொடரும். அண்டை நாட்டில் நிறைய வன்முறைகள் நடக்கின்றன. அங்கு வாழும் இந்துக்கள் காரணமே இல்லாமல் வன்முறையை எதிர்கொள்கின்றனர்

இந்தியா மற்றவர்களுக்கு உதவும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியா யாரையும் தாக்கியதில்லை. அவர்கள் எங்களுடன் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் பிரச்னையில் உள்ளவர்களுக்கு உதவி செய்து வருகிறது.

இந்த நிலையில், நமது நாடு பாதுகாப்பாக இருப்பதையும், அதே நேரத்தில் மற்ற நாடுகளுக்கு உதவுவதையும் நாம் பார்க்கிறோம்.

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்த பிறகு இந்து சிறுபான்மை சமூகத்தினர் மீது குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து 48 மாவட்டங்களில் 278 இடங்களில் சிறுபான்மை சமூகம் தாக்குதல்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டதாக வங்கதேச தேசிய இந்து மகா கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த வாரம் ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்ததற்கு முன்னரும் அதற்குப் பின்னரும் போராட்டக்காரர்களின் கொலைகள் குறித்து விசாரிக்க ஐ.நா நிபுணர்கள் குழு விரைவில் வங்கதேசத்துக்குச் செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.