தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

தில்லியில் கனமழை: மஞ்சள் எச்சரிக்கை!

கனமழையையடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

தில்லியில் கனமழை - Center-Center-Delhi

Updated On :12 ஆகஸ்ட் 2024, 9:30 am

தில்லியில் இன்று காலை பெய்த கனமழையையடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் முழுவதும் தலைநகர் தில்லியில் கனமழை கொட்டித்தீர்த்த நிலையில் ஆகஸ்ட் 5 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இடையில் மழை சற்று ஓய்வெடுத்த நிலையில், நேற்று முதல் மீண்டும் கனமழை பொழிந்து வருகின்றது.

தில்லியின் நேற்று கனமழை பெய்ததையடுத்து, நகரத்தின் பல பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது, இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை முதல் நல்ல மழைப் பதிவாகி வருவதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய தெற்கு, தென் மேற்கு மற்றும் கிழக்கு தில்லியில் நல்ல மழை பதிவாகியுள்ளது. இதனிடையே தில்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை 24.8 டிகிரி செல்சியஸாகவும், காலை 8:30 மணிக்கு ஈரப்பதம் 100 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தரவுகளின்படி, தேசியத் தலைநகரில் காற்றுத் தரக் குறியீடு காலை 9 மணிக்கு 53 என்ற அளவில் மிதமான பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.