வஞ்சக அரசியலுக்கு உதாரணமாக மாறிவிட்டார் ராகுல்: பாஜக!
காங்கிரஸ் தலைவர் "பாசாங்கு அரசியலை" பின்பற்றுகிறார்.


மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் வஞ்சக அரசியலுக்கு உதாரணமாக மாறிவிட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கெரவ் பாட்டியா பேசினார்.
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த 59 வாக்குறுதிகளில் இதுவரை இரண்டு மட்டுமே காங்கிரஸ் அரசு நிறைவேற்றியுள்ளது. கர்நாடக மக்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள்.
காங்கிரஸ் எங்கெல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம் மக்கள் ஏமாற்றப்பட்டதாகவே உணர்கிறார்கள். ஹிமாசலிலும் மக்கள் அதே மனநிலையில் தான் இருக்கின்றனர்.
வஞ்சகம், பொய் மற்றும் வஞ்சக அரசியலுக்கு இணையாக ராகுல் காந்தி மாறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கர்நாடகத்தில் விவசாயிகள் தற்கொலை விவகாரத்தை எழுப்பிய அவர், வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸ் தலைவர் "பாசாங்கு அரசியலை" பின்பற்றுகிறார். தில்லியில் விவசாயிகள் சந்திக்க ராகுலுக்கு நேரம் உள்ளது.
ஆனால் கர்நாடகத்தில் 1200 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. அவர்களைச் சந்திக்க ஒரு நிமிடம் கூட ஒதுக்க முடியவில்லை, இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கர்நாடக முதல்வருக்கு உத்தரவிடவும் இல்லை.
காந்தியின் முன்னுரிமைகள் வேறுபட்டவை என்பதால் தான், ஊழலை ஊக்குவிக்கும் ஒரு முதல்வரை கர்நாடக மக்களுக்கு வழங்கியது கவலையளிக்கிறது.
முதல்வர் மனைவிக்கு எஸ்சி, எஸ்டி சமூகத்தினரின் நிலம் ஒதுக்கப்பட்ட முடா ஊழல் பற்றி நாம் அனைவரும் அறிவோம் என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...