தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

வஞ்சக அரசியலுக்கு உதாரணமாக மாறிவிட்டார் ராகுல்: பாஜக!

காங்கிரஸ் தலைவர் "பாசாங்கு அரசியலை" பின்பற்றுகிறார்.

News image

கௌரவ் பாட்டியா

Updated On :10 ஆகஸ்ட் 2024, 10:24 am

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் வஞ்சக அரசியலுக்கு உதாரணமாக மாறிவிட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கெரவ் பாட்டியா பேசினார்.

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த 59 வாக்குறுதிகளில் இதுவரை இரண்டு மட்டுமே காங்கிரஸ் அரசு நிறைவேற்றியுள்ளது. கர்நாடக மக்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள்.

காங்கிரஸ் எங்கெல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம் மக்கள் ஏமாற்றப்பட்டதாகவே உணர்கிறார்கள். ஹிமாசலிலும் மக்கள் அதே மனநிலையில் தான் இருக்கின்றனர்.

வஞ்சகம், பொய் மற்றும் வஞ்சக அரசியலுக்கு இணையாக ராகுல் காந்தி மாறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கர்நாடகத்தில் விவசாயிகள் தற்கொலை விவகாரத்தை எழுப்பிய அவர், வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸ் தலைவர் "பாசாங்கு அரசியலை" பின்பற்றுகிறார். தில்லியில் விவசாயிகள் சந்திக்க ராகுலுக்கு நேரம் உள்ளது.

ஆனால் கர்நாடகத்தில் 1200 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. அவர்களைச் சந்திக்க ஒரு நிமிடம் கூட ஒதுக்க முடியவில்லை, இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கர்நாடக முதல்வருக்கு உத்தரவிடவும் இல்லை.

காந்தியின் முன்னுரிமைகள் வேறுபட்டவை என்பதால் தான், ஊழலை ஊக்குவிக்கும் ஒரு முதல்வரை கர்நாடக மக்களுக்கு வழங்கியது கவலையளிக்கிறது.

முதல்வர் மனைவிக்கு எஸ்சி, எஸ்டி சமூகத்தினரின் நிலம் ஒதுக்கப்பட்ட முடா ஊழல் பற்றி நாம் அனைவரும் அறிவோம் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.