பிகார் மாநில சாலை கட்டுமானத் துறையால் சாலைகளே இல்லாத வயலுக்கு நடுவே பாலம் கட்டப்பட்டுள்ளது.
அராரியா மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள இந்த வினோதமான பாலம் தொடர்பான செய்தியை அறிந்து திகைத்து போன மாவட்ட ஆட்சியர் இனாயத் கான், பாலம் குறித்து விசாரணைக்கு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து இனாயத் கான் கூறுகையில், “இந்த பாலம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த பாலம் கட்டப்பட்டதாகவும், வயலுக்கு நடுவே உள்ள பாலத்தால் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் பர்மானந்தபூர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாலைகளே இல்லாமல் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தால் விவசாய நிலங்களுக்கு இரண்டு கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பாலத்துக்கு இணைப்பு சாலைகளை உருவாக்க சம்பந்தப்பட்ட துறையிடம் கோரிக்கை முன்வைப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அராரியா மாவட்டத்தின் சாலை கட்டுமானத் துறையின் உதவிப் பொறியாளர் மனோஜ் குமார் கூறியதாவது:
“இது பாலம் அல்ல, நீர்நிலைகளை பராமரிப்பதற்காக அமைக்கப்பட்ட சதுர பாலம்(பாக்ஸ் கல்வர்ட்). முதலமைச்சரின் கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் சதுர பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் இருபுறங்களிலும் 3.2 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சாலை அமைக்கப்பட்டால் பர்மாந்தபுரம் லட்சுமிஷ்தான் மற்றும் கோபாரி இடையே இணைப்பு சாலை ஏற்படும். இதன்மூலம் இரு கிராமங்களில் வசிக்கும் 1,500 பேர் பயனடைவார்கள். இந்த சாலை அமைக்க ரூ. 3 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சாலை அமைக்கும் திட்டத்தில் 200 மீட்டர் தனியார் நிலம் உள்ளதால் பணிகள் முடிவடையாமல் உள்ளது. அதன் உரிமையாளரிடம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பிரச்னை முடிந்தவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும். விதிமுறையின் படியே சதுர பாலம் கட்டப்பட்டுள்ளது” என்றார்.
பிகார் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 13-க்கும் மேற்பட்ட பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில், இந்த பிரச்னை எழுந்துள்ளது. கட்டுமானப் பொருள்களுக்கு தரமற்ற பொருள்கள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அராரியா மாவட்டத்தில் ரூ. 12 கோடி செலவில் கட்டப்பட்ட 183 மீட்டர் நீளமுள்ள பாலம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து விசாரணை ஏற்கெனவே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆம்பூரில் ரூ.1,000 கோடிக்கு மேல் திட்டப் பணிகள் : எ.வ. வேலு

”பாட்ட அமத்துங்க!” பிரசாரத்திற்கு நடுவே நுழைந்த தவெக ஆட்டோவை கண்டித்த திலகபாமா!

முடிவுக்கு வராத மலைக்கோட்டை ரயில்வே மேம்பால பணிகள்!

சிவகங்கையில் ஓய்விடம் மாற்றம்: கட்டுமானத் தொழிலாளா்கள் அதிருப்தி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை



