15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது: இதுவரை 5 லட்சம் பேர் தரிசனம்!

தெற்கு காஷ்மீரின் நுன்வான்(பஹல்காம்) அடிப்படை முகாமிலிருந்து பக்தர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

News image

அமர்நாத் யாத்திரை

Updated On :6 ஆகஸ்ட் 2024, 6:17 am

வருடாந்திர அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தத்திற்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்தாண்டு அமர்நாத் யாத்திரை ஜூன் 29ம் தேதி தொடங்கிய நாள் முதல் சுமார் 5 லட்சம் பக்தர்கள் புனித குகைக் கோயிலைத் தரிசனம் செய்துள்ளதாக ஸ்ரீ அமர்நாத்ஜி ஆலய வாரியத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமர்நாத் யாத்திரை ஒருநாள் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. ஜம்முவிலிருந்து 1,873 பக்தர்கள் அடங்கிய மற்றொரு குழு வடக்கு காஷ்மீரிலிருந்து புறப்பட்டது.

தெற்கு காஷ்மீரின் நுன்வான்(பஹல்காம்) அடிப்படை முகாமிலிருந்து பக்தர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஜம்முவில் உள்ள பகவதி நகர் யாத்ரி நிவாஸில் இருந்து 1,873 பக்தர்களுடன் 69 வாகனங்கள் ஜம்முவில் இருந்து வடக்கு காஷ்மீரின் பால்டால் அடிப்படை முகாமிலிருந்து அதிகாலை 3.25 மணிக்குப் புறப்பட்டது.

சாரி முபாரக் சுவாமி பஹல்காம் வழியாகக் குகைக் கோயிலுக்குச் செல்லவுள்ளார். மேலும் ஆகஸ்ட் 14 வரை பஹல்காமில் இருக்கும் குகைக் கோயிலுக்குச் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பஹல்காம் பாதை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, அமர்நாத் பக்தர்கள் செல்லும் வழி நெடுகிலும் ஏராளமான பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.