மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

அமர்நாத் யாத்திரை: வானிலை மோசமானதால் பக்தர்கள் ஜம்முவில் நிறுத்திவைப்பு!

ஜம்முவில் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

News image

அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள்

Updated On :5 ஆகஸ்ட் 2024, 3:58 am

ஜம்மு - காஷ்மீரில் வானிலை மோசமாக இருப்பதால் அமர்நாத் யாத்திரைக்கு இன்று புறப்பட வேண்டிய பக்தர்கள் குழு முகாமில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.

வானிலை இயல்பு நிலைக்குத் திரும்பியதும் நாளை யாத்திரையைத் தொடங்கலாம் என்று கூறப்பட்டதாகவும், முகாமில் தங்கவைக்கப்பட்ட மக்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்து தரப்பட்டதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக, நேற்று (ஆகஸ்ட் 4) ஸ்ரீநகர் முகாமில் இருந்து பெஹல்காம் நோக்கி பயணத்தைத் தொடங்கிய பக்தர்கள் குழு வானிலை மோசமானதாக இருந்த போதிலும் யாத்திரை சென்றதாகவும், அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீ அமர்நாத்ஜி ஆலய வாரியத்தால் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. இரண்டு வழிகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த யாத்திரையில், ஒன்று பெஹல்காம் வழியாகவும், மற்றொன்று காஷ்மீரின் கந்தர்பால் மாவட்ட பல்தால் வழியாகவும் நடைபெறுகிறது. பல்தால் பகுதி பக்தர்களுக்கான முகாமாக விளங்குகிரது.

அமர்நாத் யாத்திரை கடந்த ஜூன் 29 அன்று பல்தால் மற்றும் பெஹல்காம் முகாமில் இருந்து தொடங்கியது. வருகிற ஆகஸ்ட் 19 உடன் நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.