வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பாஜக ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லை! தேர்தலில் எதிரொலிக்கும் -கார்கே

News image

படம் | கார்கே எக்ஸ் தளப் பதிவு

Updated On :7 ஏப்ரல் 2024, 6:52 am

நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது பாஜகவால் உருவாக்கப்பட்டுள்ள வேலையில்லா திண்டாட்டம் தான் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.

வேலையில்லா திண்டாட்டம் குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கார்கே பதிவிட்டுள்ளதாவது, வேலை கிடைக்காமல் நம் நாட்டு இளைஞர்கள் திண்டாடுகிறார்கள். ஆனால் நாம் வெறுமனே கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.

இந்திய தொழில்நுட்பக் கழகங்கள்(ஐஐடி) மற்றும் இந்திய மேலாண்மை கழகங்கள்(ஐஐஎம்) ஆகிய கல்வி நிறுவனங்களை எடுத்துக்கொண்டால், 12 ஐஐடிகளில் பாயிலும் மாணவர்களில் 30 சதவிகிதத்தினர் மட்டுமே வழக்கமாக நடைபெறும் வளாகத்தேர்வு மூலம் பணிக்கு தேர்வாகாமல் இருப்பதாய் தெரிய வந்துள்ளது.21 ஐஐஎம்களில் 20 சதவிகிதம் மட்டுமே, வளாகத்தேர்வு மூலம் மாணவர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.

ஐஐடி மற்றும் ஐஐஎம்-களில் இத்தகைய நிலைமை என்றால், நாடு முழுவதும் உள்ள நமது இளைஞர்களின் எதிர்காலத்தை பாஜக எவ்வாறு அழிவுப்பாதைக்கு கொண்டுசென்றுள்ளது என்பதை மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

2014-ஆம் ஆண்டுக்குப் பின், மோடி ஆட்சியில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும், 70 முதல் 80 லட்சம் இந்திய இளைஞர்கள் பணியில் சேருவதாய் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், 2012 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் வேலைவாய்ப்பு சுத்தமாக இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்மூலம், 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுமென்ற ‘மோடியின் வாக்குறுதி’, கொடுங்கனவாக இளைஞர்களின் மனதிலும் எண்ணத்திலும் ரீங்காரமிட்டு வருகிறது.

இதையடுத்து, காங்கிரஸின் ‘வேலை உறுதித் திட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, 25 வயதுக்குட்பட்ட எந்தவொரு பட்டயப்படிப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகளும் சட்டரீதியாக வேலை வேண்டுமென்று கோர உரிமை உள்ளது. அவர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும்.

இதன்மூலம், வேலைக்கும் படிப்புக்கும் இடையேயான தடைகள் நீக்கப்படும். அதன்மூலம், நாட்டில் வேலைவாய்ப்புகள் புதிய வளர்ச்சியை சந்திக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.