ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் புதன்கிழமை காலை மேலும் 3 நக்சல்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த நக்சல்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, நாசகார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, மகாராஷ்டிரா-சத்தீஸ்கர் எல்லையில், சுடின்டோலா கிராமத்திற்கு அருகே, ஆயுதம் ஏந்திய நக்சலைட்கள் சிலர் முகாமிட்டுள்ளதாக, கடந்த வெள்ளிக்கிழமை இரவு போலீசாருக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடந்த சில நாள்களுக்கு முன், மகாராஷ்டிரம்-சத்தீஸ்கர் எல்லையில் நக்சல்களின் முகாமை கட்சிரோலி போலீசார் முறியடித்து, அங்கிருந்து ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் மற்றும் பிற பொருள்களை கைப்பற்றினர்.
இதையடுத்து சத்தீஸ்கர் எல்லையில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம், கங்களூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேந்திரா - கோர்ச்சோலி கிராமங்களுக்கு இடையே உள்ள வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை (ஏப்.2) காலை 6 மணியளவில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி நக்சல்கள் பகுதியை கண்டறிந்தனர்.
அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நீண்ட நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உள்பட 10 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், நக்சல்கள் பயன்படுத்திய 303 துப்பாக்கி, 12-துளை துப்பாக்கி, கையெறி குண்டுகள் மற்றும் குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களும் வெடிமருந்துகளும் அங்கிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, நக்சல்கள் பதுங்கியிருந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், பாதுகாப்புப் படையினரின் தொடர் தேடுதல் வேட்டையின்போது, துப்பாக்கிச் சூடு நடந்த அடர்ந்த காட்டில் இருந்து புதன்கிழமை காலை மேலும் மூன்று நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன் மூலம் செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த நக்சலைட்டுகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
"இறந்த நக்சல்களின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை, ஆனால் , அவர்கள் மாவோயிஸ்ட்டுகளின் (மக்கள் விடுதலை கொரில்லா ராணுவம்) 2 -ஐ சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது" என்று அந்த அதிகாரி கூறினார்.
பிஜப்பூர் மாவட்டம் பஸ்தார் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது, இங்கு ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகளிர் இடஒதுக்கீடு: நாட்டிலேயே சத்தீஸ்கரில் அதிக பெண் சட்டப்பேரவை உறுப்பினர்கள்!

ஜம்மு - காஷ்மீரில் சந்தேக நபர்கள் நடமாட்டம்: பாதுகாப்புப் படை தேடுதல் நடவடிக்கை

சத்தீஸ்கரில் நக்ஸல் சுட்டுக் கொலை! தேடுதல் வேட்டை தீவிரம்!

சத்தீஸ்கரில் ஒரே நாளில் 108 நக்சல்கள் சரண்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை



