தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

2024 இல் லக்னௌவில் ராணுவ தின அணிவகுப்பு!

2024 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி ராணுவ தின அணிவகுப்பு நிகழ்ச்சியை உத்தர பிரதேசத்தின் தலைநகரான லக்னௌவில் நடத்தவுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:01 am

DIN

புது தில்லி: இந்திய ராணுவத்தின் வருடாந்திர ராணுவ தின அணிவகுப்பை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு முக்கிய நிகழ்ச்சிகளை எடுத்துச் செல்லும் இந்திய அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக, 2024 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி நிகழ்ச்சியை உத்தர பிரதேசத்தின் தலைநகரான லக்னௌவில் நடத்தவுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ஆம் தேதி தேசிய தலைநகர் பகுதியில் அனுசரிக்கப்பட்டு வந்த இந்திய ராணுவ தின அணிவகுப்பு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு முக்கிய நிகழ்வுகளை எடுத்துச் செல்லும் இந்திய அரசின் முயற்சிக்கு ஏற்ப, கடந்த ஆண்டு முதல், தேசிய தலைநகருக்கு வெளியே நடத்த முடிவு செய்யப்பட்டது மற்றும் 75 ஆவது ராணுவ தின அணிவகுப்பு பெங்களூருவில் நடைபெற்றது. 

இந்த நிலையில், “வரவிருக்கும் 2024 ஜனவரி 15 ராணுவ தின அணிவகுப்பை லக்னௌவில் நடத்தவுள்ளதாக” ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

"இந்த நடவடிக்கையானது பொது ஈடுபாட்டை அதிகரிப்பது, தேசிய ஒற்றுமையை வளர்ப்பது மற்றும் ராணுவத்தின் வலிமை மற்றும் ஒழுக்கத்தை நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

"சுழற்சி என்பது நகரங்களை மாற்றுவது மட்டுமல்ல, பல்வேறு நிகழ்வுகளுக்கு கவனத்தை மாற்றுவதும் ஆகும், அவை ஒவ்வொன்றும் நாட்டின் பாதுகாப்பில் தனித்துவமான மற்றும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது நமது ராணுவம் செயல்படும் தனித்துவமான கலாசார மற்றும் பிராந்திய பின்னணியை முன்னிலைப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது" என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.