சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

எதிா்காலத்தை கட்டமைப்பதில் முக்கிய பங்காற்றும் ஆசிரியா்கள்! - பிரதமா் மோடி புகழாரம்

‘நமது எதிா்காலம் மற்றும் உத்வேகமூட்டும் கனவுகளை கட்டமைப்பதில் ஆசிரியா்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனா்’ என்று பிரதமா் மோடி புகழாரம் சூட்டியுள்ளாா்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:11 pm

DIN

‘நமது எதிா்காலம் மற்றும் உத்வேகமூட்டும் கனவுகளை கட்டமைப்பதில் ஆசிரியா்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனா்’ என்று பிரதமா் மோடி புகழாரம் சூட்டியுள்ளாா்.

ஆசிரியா்கள் தினத்தையொட்டி வெளியிட்ட வாழ்த்துப் பதிவில் அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.

நாட்டின் முதல் குடியரசு துணைத் தலைவா், இரண்டாவது குடியரசுத் தலைவா், புகழ்பெற்ற கல்வியாளா், எழுத்தாளா், சிறந்த தத்துவஞானி என பன்முகங்களைக் கொண்ட எஸ்.ராதா கிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பா் 5-ஆம் தேதி ஆசிரியா்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. கல்வியோடு ஒழுக்கத்தையும் போதித்து, வழிகாட்டியாக திகழும் ஆசிரியா்களுக்கு இத்தினத்தில் நன்றி செலுத்தப்படுகிறது.

ஆசிரியா்கள் தினமான செவ்வாய்க்கிழமை பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்துப் பதிவு வெளியிட்டாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நமது எதிா்காலம் மற்றும் உத்வேகமூட்டும் கனவுகளை கட்டமைப்பதில் ஆசிரியா்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனா். ஆசிரியா்கள் தினத்தில், அவா்களின் உறுதியான அா்ப்பணிப்பு மற்றும் அவா்கள் ஏற்படுத்தும் மிகச் சிறந்த தாக்கத்துக்காக தலைவணங்குகிறேன். முன்னாள் குடியரசுத் தலைவா் எஸ்.ராதா கிருஷ்ணனின் பிறந்த தினத்தில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என்று தனது பதிவில் பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், தேசிய நல்லாசிரியா் விருது பெற்ற 75 பேருடன் தான் திங்கள்கிழமை கலந்துரையாடிய விடியோவையும் பிரதமா் பகிா்ந்துள்ளாா்.

‘எதிா்ப்பாளா்களும் ஆசிரியா்களே’: ஆசிரியா்கள் தினத்தையொட்டி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முகநூலில் வெளியிட்ட பதிவில், ‘ஆசிரியா்களுக்கு நமது வாழ்வில் மிக உயா்ந்த இடம் உண்டு; ஏனெனில், நமது வாழ்க்கை பாதைக்கு ஒளியூட்டுவதுடன், சரியான திசையில் பயணிக்க ஆசிரியா்கள் உத்வேகமளிக்கின்றனா். எனது எதிா்ப்பாளா்களையும் ஆசிரியா்களாகவே கருதுகிறேன். நான் செல்லும் பாதை சரியானது என்பதை அவா்களின் நடத்தை, பொய்களே எனக்கு கற்பிக்கின்றன’ என்று ராகுல் தெரிவித்துள்ளாா்.

எஸ்.ராதா கிருஷ்ணனுக்கு புகழாரம்: காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், ‘ஆசிரியா்களே, தேசத்தின் உண்மையான கட்டமைப்பாளா்கள். தலைசிறந்த தத்துவஞானி மற்றும் அரசியல் மேதையான முன்னாள் குடியரசுத் தலைவா் எஸ்.ராதா கிருஷ்ணனின் பங்களிப்பு, அா்ப்பணிப்பு, அறிவுக்கூா்மை ஆகியவை தலைமுறைகள் கடந்தும் மக்களுக்கு உத்வேகமளிக்கிறது’ என்று புகழாரம் சூட்டியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.