தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மூத்த குடிமக்களுக்கு ரயிலில் இலவச புனிதப் பயணம்: ஜன.21 முதல் தொடக்கம்!

மத்தியப் பிரதேசத்தில் மூத்த குடிமக்களுக்கான இலவச புனிதப் பயணத் திட்டம் ஜனவரி 21(சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது. 

News image

கோப்புப்படம்

Updated On :20 ஜனவரி 2023, 10:23 am

மத்தியப் பிரதேசத்தில் மூத்த குடிமக்களுக்கான இலவச புனிதப் பயணத் திட்டம் ஜனவரி 21(சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது. 

இதுகுறித்து கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ராஜேஷ் ரஜோரா கூறுகையில், 

மூத்த குடிமக்களுக்கான இந்தாண்டு புனிதப் பயணத் திட்டத்தின் கீழ் அடுத்த இரண்டு மாதங்களுக்கு கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேரை பல்வேறு மதத் தலங்களுக்கு அழைத்துச் செல்ல அரசு திட்டமிட்டுள்ளது. 

ஜனவரி 21 முதல் மார்ச் 29 வரை நாட்டின் பல்வேறு புனித இடங்களுக்கு மூத்த குடிமக்களை அழைத்துச் செல்வதற்காக மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு நகரங்களிலிருந்து 20 ரயில்கள் இயக்கப்படுகிறது. 

முதன்முதலில் இலவச புனிதப் பயணத் திட்டம் 2012இல் தொடங்கப்பட்டது. கரோனா தொற்றுநோய்களின் காரணமாக இது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ம.பி.யை அடுத்த இந்த புனிதப் பயணத் திட்டம் பல்வேறு மாநிலங்களிலும் தொடங்கியுள்ளன. 

இந்த பயணத்தில் முதியவர்கள் ராமேஸ்வரம், துவாரகா, காமாக்யா, ஷீரடி, ஜகன்னாத் புரி, அயோத்தி மற்றும் காசி (வாரணாசி) ஆகிய இடங்களுக்குச் செல்ல முடியும். 

மாநிலத்தில் வரி செலுத்தாத 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் இந்த புனிதப் பயணத்திற்கு தகுதியானவர்கள். பெண்களுக்கு 2 ஆண்டுகள் தளர்வு உண்டு. இந்தத் திட்டத்தின் கீழ் ரயிலில் புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு காலை உணவு, மதிய உணவு, குடிநீர், தங்கும் வசதி, பேருந்தில் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகள் ஆகிய அனைத்தும் அரசு இலவசமாக செய்து தருகிறது.

60 சதவீதத்திற்கு மேல் ஊனமுற்றவர்களுக்கு புனிதப் பயணம் செய்ய வயது வரம்பு இல்லை.

புனிதப் பயணம் செல்ல விரும்பும் தம்பதியர், அவர்களில் ஒருவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயதை விடக் குறைவாக இருந்தால், அத்தகைய தம்பதியர் புனிதப் பயணத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். 

65 வயதுக்கு மேற்பட்ட தனி நபர்களும், 60 சதவீதத்துக்கும் அதிகமான ஊனமுற்றவர்களும் தங்களுடன் ஒரு பராமரிப்பாளரை இலவசமாக அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.