தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பூஜ்ய டிகிரி செல்சியஸ்: கடும் குளிரில் சிக்கித் தவிக்கும் வடமாநிலங்கள்!

பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் கடும் குளிர் நீடித்து வருவதால், அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

News image
Updated On :18 ஜனவரி 2023, 7:14 am

பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் கடும் குளிர் நீடித்து வருவதால், அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

வடமாநிலங்களின் பல பகுதிகளில் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் பூஜ்ஜிய டிகிரி வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. 

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

வடமாநிலங்களின் பல பகுதிகளில் வெப்பநிலை வழக்கத்தை விடக் குறைவாகப் பதிவாகியுள்ளது.பஞ்சாபில் உள்ள பதிண்டா மற்றும் ஃபரித்கோட்டில் மைனஸ் 0.2 டிகிரி செல்சியஸ் மற்றும் 0.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

அமிர்தசரஸில் 2.9 டிகிரியாகவும், லூதியானாவில் 2.8 டிகிரியாகவும், பாட்டியாலாவில் 2.6 டிகிரியாகவும், பதான்கோட்டில் 3.8 டிகிரியாகவும், குர்தாஸ்பூரில் 2 டிகிரியாகவும், மோகாவில் 0.5 டிகிரியாகவும் மொஹாலியில் 4.2 டிகிரியாகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகரான சண்டிகரில் 3.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

ஹரியானாவில் நர்னால் 0.5 டிகிரியாகவும், சிர்சா 1 டிகிரியாகவும், ஹிசார் 2 டிகிரியாகவும், கர்னாலில் 2.4 டிகிரியாகவும், ரோஹ்தக்கில் 2.8 டிகிரியாகவும், அம்பாலாவில் 4.9 டிகிரியாகவும் வெப்பநிலை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் ஆகிய மாநிலங்களில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக கடும் குளிரின் பிடியில்  சிக்கித் தவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.