காதலிலும், போரிலும் எதுவும் நியாயம் என்பது சரியா என்றால், நிச்சயமாக அவ்வாறு ஒப்புக் கொள்ள முடியாது. அதுபோல, தங்களது காதலிகளுடன் நேரத்தை செலவிட, விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தக் குற்றத்துக்காக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற இரண்டு பேர் தேடப்பட்டு வருகிறார்கள்.
அபிநவ் பிரகாஷ் (24), பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தில்லியிலிருந்து புணேவுக்கு செல்ல தயாராக இருந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வியாழக்கிழமை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
தில்லியிலிருந்து புணே செல்ல ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் எஸ்ஜி 8938 விமானம் வியாழக்கிழமை மாலை 5.35 மணிக்கு தயாராக இருந்தது. அதில் பயணிக்க இருந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் பரிசோதித்துக் கொண்டிருந்தபோது, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஸ்பைஸ்ஜெட் கால் சென்டருக்கு தகவல் வந்தது. இதையடுத்து விமானத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.
அந்த விமானம் தனியாக நிறுத்தப்பட்டு, தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டனர். சிறப்புப் படையினர் விமானப் பயணிகளின் உடைமைகள் மற்றும் விமானத்தை தீவிரமாக சோதனை நடத்தினர்.
அந்த சமயத்தில் விமானத்தில் பயணிகள் யாருமில்லை. சோதனையிலும் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. அதன்பின்னா், வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இந்த நிலையில், வெடிகுண்டு இருப்பதாக மிரட்டிய தொலைபேசி எண்ணைக் கண்டறிந்து முகவரி உள்ளிட்ட விவரங்களை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இந்தக் குற்றத்துக்காக அபிநவ் பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், அவரது நண்பர்கள் இருவரின் பெண் தோழிகள் இந்த விமானத்தில் பயணிப்பதாக இருந்ததாகவும், தனது நண்பர்கள் அவர்களது தோழிகளுடன் கொஞ்ச நேரம் கூடுதலாக செலவிட விரும்பி, தன்னை வெடிகுண்டு மிரட்டல் விடுக்குமாறுச் சொன்னதாகவும், அவர்களுக்காக இந்தக் குற்றத்ததை அவர் செய்ததாகவும் அந்த விமானம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று தாங்கள் எதிர்பார்த்ததாகவும் கூறியிருக்கிறார்.
விமானம் தாமதமாகவதை அவர்கள் கொண்டாடியதும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கச் சொன்ன நண்பர்கள் இருவரும், அபிநவ் கைது செய்யப்பட்டதை அறிந்ததும் தலைமறைவாகிவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?

ஆம்புலன்ஸில் சென்று வாக்களித்த உடல்நிலை சரியில்லாத முதியவா்

கரூரில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன்: எம்.ஆா். விஜயபாஸ்கா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

