தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆந்திர அரசு அளித்த வீட்டுமனையை நிராகரிக்கும் 95 ஆயிரம் பெண்கள்

ஆந்திர அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெண் பயனாளர்களுக்கு வீடு கட்டிக் கொள்ள வழங்கிய வீட்டுமனையில் கிட்டத்தட்ட 95 ஆயிரம் பேர் வீடு கட்ட மறுத்துவருகிறார்கள்.

News image

ஆந்திர அரசு அளித்த வீட்டுமனையை நிராகரிக்கும் 95 ஆயிரம் பெண்கள்

Updated On :4 ஜனவரி 2023, 10:54 am

அமராவதி: ஆந்திர அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெண் பயனாளர்களுக்கு வீடு கட்டிக் கொள்ள வழங்கிய வீட்டுமனையில் கிட்டத்தட்ட 95 ஆயிரம் பேர் வீடு கட்ட மறுத்துவருகிறார்கள்.

மனித நடமாட்டம் இல்லாத அல்லது சுடுகாடுகளுக்கு அருகில் வீட்டு மனை போன்ற பல்வேறு காரணங்களால், சுமார் 95 ஆயிரம் பேர், தங்களுக்கு வீடு கட்டிக் கொள்ள அரசு ஒதுக்கிய வீட்டு மனையில் வீடு கட்ட மறுத்துள்ளனர்.

இதனால், மாற்று இடங்களைத் தேடி அவற்றை பயனாளர்களுக்கு வழங்க ஆந்திர அரசு மேலும் 800 கோடி செலவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து குடியிருப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், மக்கள் கேட்கும் வகையில் வீட்டு மனையை ஒதுக்க வேண்டும் என்றால், தனியாரிடமிருந்து சுமார் 2,000 ஏக்கர் நிலத்தை பணம் கொடுத்த வாங்க வேண்டியதிருக்கும். ஏற்கனவே மக்களுக்கு அளித்த நிலம் அரசுக்குச் சொந்தமானது என்று தெரிவித்துள்ளார்.

ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியிடம் குடியிருப்புத் துறை அதிகாரிகள் பேசுகையில், 95,106 பயனாளர்கள் தங்களது வழங்கப்பட்ட தலா 1.5 சென்ட் வீட்டு மனையைப் பெற்றுக் கொண்டு வீடு கட்டத் தயாராக இல்லை என்ற தகவலை தெரிவித்துள்ளனர்.

இதில் சுமார் 30 சதவீத நிலப்பகுதி, சுடுகாடு போன்ற இடங்களுக்கு அருகில் அமைந்திருப்பதையும் அரசு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

தாங்கள் வசிக்கும் கிராமத்திலேயே தங்களுக்கு வீட்டு மனை ஒதுக்கித் தருமாறும், அப்படி செய்தால்தான் தங்களது வாழ்வாதாரம் காக்கப்படும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.