சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

சுதந்திர நாள் விழா.. கொடிமரத்தின் விவரங்கள் தெரியுமா?

தமிழ்நாடு அரசு சார்பில் சுதந்திர நாள் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு சுதந்திர நாள் விழாவுக்கான ஏற்பாடுகளை இன்று (ஆக. 2) ஆய்வு செய்தார். 

News image
தேசியக்கொடி தாங்கி நிற்கும் கொடிமரம்
Updated On :2 பிப்ரவரி 2024, 2:46 am

DIN

தமிழ்நாடு அரசு சார்பில் சுதந்திர நாள் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு சுதந்திர நாள் விழாவுக்கான ஏற்பாடுகளை இன்று (ஆக. 2) ஆய்வு செய்தார். 

சுதந்திர நாள் விழாவில் காவல் துறை உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அணிவகுப்பு ஒத்திகையும் தொடங்கவுள்ளது. 

கலைஞர் கருணாநிதியின், தீவிர முயற்சியால், 1974 முதல் மாநில முதல்வர்கள் சுதந்திர நாளன்று தேசிய கொடியேற்றலாம் என்ற உரிமை பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர நாளன்று மாநில முதல்வர் கொடியேற்றி மரியாதை செலுத்துகின்றனர். 

கொடி மரத்தின் விவரங்கள்:

1687-1692 வரை, சென்னை மாகாண ஆங்கிலே ஆளுநராக இருந்த ‘யேல்‘ என்பவரின் காலகட்டத்தில் 150 அடி மரத்திலான கொடி கம்பம் நிறுவப்பட்டது. இது மரத்தால் ஆனது.

மரக்கம்பம் பழுதடைந்ததால், 1994ல் 119 அடி உயர இரும்பிலான கொடி கம்பம் எல் & டி (L & T) நிறுவனம் மூலம் நிறுவப்பட்டது. கோட்டை கொத்தளத்தின் பீடத்திற்குமேல், கொடி கம்பம் 3 அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது.

கொடி கம்பம் முதல் அடுக்கு, 69 அடி உயரம், 20 அங்குல இரும்பு குழாயால் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் 10 அடி விட்டமுள்ள இரும்பு தகடு நடைமேடை உள்ளது.

கொடி கம்பத்தின் இரண்டாம் அடுக்கு, 30 அடி உயரம், 12 அங்குல இரும்பு குழாயால் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் 5 அடி விட்டமுள்ள இரும்பு தகடு நடைமேடை உள்ளது.

கொடி கம்பத்தின் மூன்றாம் அடுக்கு, 20 அடி உயரம், 6 அங்குல இரும்பு குழாயால் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.