பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மதுபாட்டில்களிலும் எச்சரிக்கை வாசகம்: பொதுநலன் மனு தள்ளுபடி

புகையிலைப் பொருள்களைப் போல மதுபாட்டில்களிலும் எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்ய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரிய பொது நலன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

News image

மதுபாட்டில்களிலும் எச்சரிக்கை வாசகம்: பொதுநலன் மனு தள்ளுபடி

Updated On :23 செப்டம்பர் 2022, 12:47 pm


புது தில்லி: புகையிலைப் பொருள்களைப் போல மதுபாட்டில்களிலும் எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச் செய்ய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரிய பொது நலன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மாநில அரசுகளின் கொள்கை தொடர்பாக விவகாரங்களில் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாய் தொடர்ந்த பொது நலன் மனுவில், புகையிலையை விடவும் உடலுக்கு கேடு விளைவிப்பது மதுபானங்கள். எனவே, புகையிலையில் உடலுக்குக் கேடு என்பதை விளக்கும் படங்கள் மற்றும் வாசகங்கள் இடம்பெறுவது போல, மதுபாட்டில்களிலும் வாசகங்கள் இடம்பெற நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது மாநில அரசுகளின் கொள்கை விவகாரங்கள்.  எனவே, அதில் நீதிமன்றம் தலையிடாது என்று தெரிவித்துவிட்டது.

அது மட்டுமல்லாமல், மதுபானத்தை அளவோடு எடுத்துக் கொண்டால், அதனால் உடலுக்கு சில நன்மைகள் இருப்பதாக பரிந்துரைகள் உள்ளதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.