பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மத்திய அமைச்சரின் கடற்கரையோர பங்களாவை இடித்துத் தள்ள உத்தரவு; ரூ.10 லட்சம் அபராதம்

பங்களாவை இடித்துத் தள்ளவும் மத்திய அமைச்சர் நாராயண் ரானேவுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தும் மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image

மத்திய அமைச்சரின் கடற்கரையோர பங்களாவை இடித்துத் தள்ள உத்தரவு

Updated On :20 செப்டம்பர் 2022, 7:19 am

மும்பை: கடற்கரையோரம் விதிமுறைகளை மீறி, அனுமதிபெற்ற அளவை விட 300 சதவீதம் அதிகமாகக் கட்டப்பட்ட பங்களாவை இடித்துத் தள்ளவும் மத்திய அமைச்சர் நாராயண் ரானேவுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தும் மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விதிமீறிய கட்டடங்களை இடிக்க மும்பை மாநகராட்சி அவகாசம் வழங்கியும் இடிக்காததால், பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சராக உள்ள நாராயணன் ரானேவுக்குச் சொந்தமான கட்டடங்களை இரண்டு வாரங்களில் இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறி மத்திய அமைச்சர் நாராயணன் ரானே கட்டிய கட்டங்களுக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மும்பை கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியின்றி கட்டடங்களைக் கட்டியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விசாரணையில், பங்களா கட்ட அனுமதிக்கப்பட்ட அளவை விட 300 சதவீதம் கூடுதலாக கட்டடங்களை கட்டியதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

விதிமீறல் கட்டடங்களை முறைப்படுத்த நாராயணன் ரானே விடுத்த முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிமன்றம், 8000 சதுர அடியில் பங்களா கட்ட அனுமதி பெற்றுவிட்டு 22 ஆயிரம் சதுர அடியில் பங்களா கட்டியதற்காக மத்திய அமைச்சருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.