சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சண்டீகர் பல்கலை. மாணவியின் ஆட்சேபகரமான விடியோ விவகாரம்: விசாரணைக் குழு அமைப்பு

சண்டீகர் பல்கலைக்கழக மாணவியின் ஆட்சேபகரமான விடியோ பதிவு செய்யப்பட்டு பகிரப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
சண்டீகர் பல்கலை. மாணவியின் ஆட்சேபகரமான விடியோ விவகாரம்: விசாரணைக் குழு அமைப்பு
Updated On :1 பிப்ரவரி 2024, 10:22 am

ANI

சண்டீகர்: சண்டீகர் பல்கலைக்கழக மாணவியின் ஆட்சேபகரமான விடியோ பதிவு செய்யப்பட்டு பகிரப்பட்ட விவகாரத்தில் காவல்துறை பெண் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது, இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு மாணவி மற்றொரு மாணவருடன் உள்ள தனது ஆட்சேபகரமான பதிவை அவரே பகிர்ந்துள்ளார் என்று தெரிவித்தனர். அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய மாணவர் தலைமறைவாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதே வேளையில் பல்கலைக்கழக மாணவிகள் மேலும் சிலரின் விடியோ காட்சிகள் சமக ஊடங்களில் பகிரப்பட்டதாக வெளியான தகவல்களை பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்துள்ளது.

அதோடு, இந்த விவகாரத்தில் சில மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல்கள் முற்றிலும் வதந்தி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.  இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளது. இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய கவுன்சிலிங் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அவர் இது குறித்து டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், சண்டீகர் பல்கலைக்கழக விடுதிதயில் நடைபெற்ற துரதிருஷ்டவசமான சம்பவம் வேதனை அளிக்கிறது. நமது மகள்கள் நமது கௌரவம். இந்த விவகாரம் தொடர்பாக உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, காவல்துறையைச் சேர்ந்த மூன்று பெண் சிறப்பு விசாரணை அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளார். இதுவரை இந்தச் சம்பவத்தில் ஒரு மாணவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.