தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சண்டீகர் பல்கலை. மாணவியின் ஆட்சேபகரமான விடியோ விவகாரம்: விசாரணைக் குழு அமைப்பு

சண்டீகர் பல்கலைக்கழக மாணவியின் ஆட்சேபகரமான விடியோ பதிவு செய்யப்பட்டு பகிரப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

சண்டீகர் பல்கலை. மாணவியின் ஆட்சேபகரமான விடியோ விவகாரம்: விசாரணைக் குழு அமைப்பு

Updated On :19 செப்டம்பர் 2022, 11:29 am

சண்டீகர்: சண்டீகர் பல்கலைக்கழக மாணவியின் ஆட்சேபகரமான விடியோ பதிவு செய்யப்பட்டு பகிரப்பட்ட விவகாரத்தில் காவல்துறை பெண் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது, இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு மாணவி மற்றொரு மாணவருடன் உள்ள தனது ஆட்சேபகரமான பதிவை அவரே பகிர்ந்துள்ளார் என்று தெரிவித்தனர். அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய மாணவர் தலைமறைவாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதே வேளையில் பல்கலைக்கழக மாணவிகள் மேலும் சிலரின் விடியோ காட்சிகள் சமக ஊடங்களில் பகிரப்பட்டதாக வெளியான தகவல்களை பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்துள்ளது.

அதோடு, இந்த விவகாரத்தில் சில மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல்கள் முற்றிலும் வதந்தி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.  இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளது. இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய கவுன்சிலிங் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அவர் இது குறித்து டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், சண்டீகர் பல்கலைக்கழக விடுதிதயில் நடைபெற்ற துரதிருஷ்டவசமான சம்பவம் வேதனை அளிக்கிறது. நமது மகள்கள் நமது கௌரவம். இந்த விவகாரம் தொடர்பாக உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, காவல்துறையைச் சேர்ந்த மூன்று பெண் சிறப்பு விசாரணை அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளார். இதுவரை இந்தச் சம்பவத்தில் ஒரு மாணவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.