தலைநகர் தில்லியில் டெங்கு தொற்று மெல்ல அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தில்லி மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
செப்.9-ம் தேதி வரை 295 டெங்கு தொற்று பதிவாகியுள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மேலும் 101 பேருக்கு புதிதாகத் தொற்று பரவியுள்ளது. இதையடுத்து செப்.17 வரை மொத்த பாதிப்பு 396 ஆக உயர்ந்துள்ளது.
2017-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் 17 வரையிலான காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட டெங்கு வழக்குகளின் எண்ணிக்கை 1,465 ஆக இருந்தது. இந்த நோயால் இந்தாண்டு இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
இந்த ஆண்டு செப்டம்பர் 17 வரை 92 மலேரியா மற்றும் 17 சிக்குன்குனியா வழக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகரித்து வரும் டெங்கு வழக்குகள் எங்களுக்கு கவலையளிக்கும் விஷயம். அதை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளில் நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த நோய்ப் பாதிப்பு பொதுவாக ஜூலை, நவம்பர் மாதங்களில் பதிவாகும். ஆனால், இந்த பாதிப்பு காலம் டிசம்பர் மத்திவரை நீடிக்கும். இந்தாண்டு, கொசுக்கள் பெருகுவதற்கு ஏற்ற காலநிலை காரணமாக டெங்கு பாதிப்புகள் முன்கூட்டியே பதிவாகும் சூழல் நிலவுகிறது.
கடந்தாண்டு, தலைநகரில் 9,613 டெங்கு பாதிப்புகள் பதிவானது. இது 2015ல் 23 இறப்புகளும், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் தலா பத்து பேரும், 2018 இல் நான்கு பேரும், 2019 இல் 2 பேரும் டெங்குவால் உயிரிழந்துள்ளனர்.
தில்லியில் 2016ல் 4,431 பேருக்கும், 2017ல் 4,726 பேருக்கும் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் இந்த எண்ணிக்கை 2018இல் 2,798 ஆகவும், 2019இல் 2,036, 2020இல் 1,072 ஆகவும் குறைந்துள்ளது. 2015இல் நகரில் டெங்கு பாதிப்பு 10,600ஐத் தாண்டியது.
தில்லியில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களிலும், மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1996-க்குப் பிறகு தில்லியில் ஏற்பட்ட மிக மோசமான டெங்கு பாதிப்பு இதுவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தலைவர்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


