பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பருவமழை பொய்த்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவுங்கள்: மாயாவதி

பருவமழை பொய்த்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உத்தரப் பிரதேச அரசு உதவ வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். 

News image

மாயாவதி

Updated On :8 செப்டம்பர் 2022, 9:15 am

பருவமழை பொய்த்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உத்தரப் பிரதேச அரசு உதவ வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். 

கரும்பு நிலுவைத் தொகை மற்றும் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததால் உத்தரப் பிரதேச விவசாயிகள் ஏற்கனவே துயரத்தில் உள்ளனர். 

தற்போது பருவமழை பொய்த்ததால் மேலும் கவலை அதிகரித்துள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சியின் மேலிடத் தலைவர் இந்தியில் ட்வீட் செய்துள்ளார். 

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விவசாயிகளை மீட்க அரசு உடனடியாக உதவ வேண்டும். இதுவே பகுஜன் சமாஜ் கட்சியின் கோரிக்கையாகும்.

மற்றுமொரு டிவிட்டர் பதிவில், உத்தரப் பிரதேசம் போன்ற மிகப்பெரிய விவசாயிகள் கொண்ட மாநிலத்தில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.192 கோடி செலவழிக்கப்படும் என்று சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு ரூ.38 கோடி மட்டுமே பயிர் பாதுகாப்பு மற்றும் சேமிப்புக்குச் செலவழிக்கப்படுகிறது. இவற்றைப் புறக்கணிப்பதை அரசு நிறுத்த வேண்டும். 

உத்தரப் பிரதேசத்தில், மொத்தமுள்ள 75 மாவட்டங்களில் 62 மாவட்டங்கள் இந்த பருவத்தில் குறைவான மழையைப் பெற்றுள்ளன, மேலும் நிலத்தடி யதார்த்தத்தை மதிப்பிடுவதற்கு மாநில அரசு ஒரு கணக்கெடுப்புக்கு உத்தரவிட்டுள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.