2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பருவமழை பொய்த்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவுங்கள்: மாயாவதி

பருவமழை பொய்த்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உத்தரப் பிரதேச அரசு உதவ வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். 

News image
மாயாவதி
Updated On :1 பிப்ரவரி 2024, 10:16 am

PTI

பருவமழை பொய்த்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உத்தரப் பிரதேச அரசு உதவ வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார். 

கரும்பு நிலுவைத் தொகை மற்றும் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததால் உத்தரப் பிரதேச விவசாயிகள் ஏற்கனவே துயரத்தில் உள்ளனர். 

தற்போது பருவமழை பொய்த்ததால் மேலும் கவலை அதிகரித்துள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சியின் மேலிடத் தலைவர் இந்தியில் ட்வீட் செய்துள்ளார். 

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விவசாயிகளை மீட்க அரசு உடனடியாக உதவ வேண்டும். இதுவே பகுஜன் சமாஜ் கட்சியின் கோரிக்கையாகும்.

மற்றுமொரு டிவிட்டர் பதிவில், உத்தரப் பிரதேசம் போன்ற மிகப்பெரிய விவசாயிகள் கொண்ட மாநிலத்தில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.192 கோடி செலவழிக்கப்படும் என்று சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு ரூ.38 கோடி மட்டுமே பயிர் பாதுகாப்பு மற்றும் சேமிப்புக்குச் செலவழிக்கப்படுகிறது. இவற்றைப் புறக்கணிப்பதை அரசு நிறுத்த வேண்டும். 

உத்தரப் பிரதேசத்தில், மொத்தமுள்ள 75 மாவட்டங்களில் 62 மாவட்டங்கள் இந்த பருவத்தில் குறைவான மழையைப் பெற்றுள்ளன, மேலும் நிலத்தடி யதார்த்தத்தை மதிப்பிடுவதற்கு மாநில அரசு ஒரு கணக்கெடுப்புக்கு உத்தரவிட்டுள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.