பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

நாட்டில் 80 % அரசுப் பள்ளிகள் குப்பைக் கிடங்குகளை விட மோசமானவை: கேஜரிவால்

நாட்டில் உள்ள 80 சதவீத அரசுப் பள்ளிகள் குப்பைக் கிடங்குகளை விட மோசமாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார். 

News image
Updated On :7 செப்டம்பர் 2022, 6:48 am

நாட்டில் உள்ள 80 சதவீத அரசுப் பள்ளிகள் குப்பைக் கிடங்குகளை விட மோசமாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார். 

14,500 பள்ளிகளை நவீனமயமாக்கும் பிரதமரின் முடிவை கடலில் ஒரு துளி நீர் என்று தொடர்ந்து பேசிய கேஜரிவால், நாட்டில் உள்ள 10 லட்சம் அரசுப் பள்ளிகளையும் மேம்படுத்தும் திட்டத்தை மீண்டும் வலியுறுத்தினார். 

இந்தியாவில் தினமும் 27 கோடி மாணவர்கள் பள்ளிக்குச் செல்கிறார்கள். அதில் 18 கோடி மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். அதில் 80 சதவீத அரசுப் பள்ளிகளின் நிலைக் குப்பைக் கிடங்கை விட மோசமாக உள்ளது. 

கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு இதுபோன்ற கல்வியை வழங்கினால், நாடு எப்படி வளர்ச்சியடையும் என்று கற்பனை செய்து பாருங்கள் என்று கேஜரிவால் இந்தியில் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

14,500 பள்ளிகளை நவீனமயமாக்க நீங்கள் திட்டம் வகுத்துள்ளீர்கள் ஆனால் இந்த வேகத்தில் செயல்பட்டால், அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்த 100 ஆண்டுகள் ஆகும்.

நாட்டில் உள்ள அனைத்து 10 லட்சம் அரசுப் பள்ளிகளையும் மறுசீரமைப்பதற்கான திட்டத்தைத் தயாரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், என்று அவர் மேலும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.