2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

10 லட்சத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்க வேண்டும்: கேஜரிவால் வேண்டுகோள்

அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள 10 லட்சத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்குவதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:15 am

PTI

புது தில்லி: அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள 10 லட்சத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்குவதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார். 

செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய கேஜரிவால்,

ஆம் ஆத்மி கட்சியின் "மேக் இந்தியா நம்பர் 1 " பிரசாரத்தைத் தனது சொந்த ஊரான ஹரியாணாவில் உள்ள ஹிசாரில் இருந்து புதன்கிழமை தொடங்கப் போவதாக அறிவித்தார். 

ஸ்ரீ யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 14,500 பள்ளிகள் மேம்படுத்தப்படும் என்றும், ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், நூலகங்கள் மற்றும் விளையாட்டு வசதிகள் உள்ளிட்ட நவீன உள்கட்டமைப்புகளுடன் அமைக்கப்படும் என்றும் மோடி திங்களன்று அறிவித்தார். 

இது மிகவும் நல்ல விஷயம், ஆனால் 14,500 பள்ளிகளை நவீனமயமாக்குவது கடலில் ஒரு துளி தண்ணீர் போன்றது. 

நாட்டில் உள்ள 10.5 லட்சம் அரசுப் பள்ளிகளையும் நவீனமாக்க வேண்டும் என்று பிரதமரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கேஜரிவால் கூறினார். 

14,500 பள்ளிகளை மட்டும் நவீனப்படுத்தினால், நாட்டில் உள்ள 10.5 லட்சம் பள்ளிகளை மேம்படுத்த 70-80 ஆண்டுகள் ஆகும். 

ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல தரமான இலவசக் கல்வியை உறுதி செய்யாத வரையில் இந்தியா உலகின் முதல் நாடாக மாற முடியாது என்றார்.

"மேக் இந்தியா நம்பர் 1" பிரசாரத்தில் சேர விரும்புபவர்கள் 9510001000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.