/

பூடானுக்கு பயன்பாட்டு வாகனங்களை கொண்டு சேர்த்த இந்திய ரயில்வே

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு பூடானால் வாங்கப்பட்ட பயன்பாட்டு வாகனங்களை இந்திய ரயில்வே பல முறை போக்குவரத்துகளைப் பயன்படுத்தி, இன்று அந்நாட்டிடம் ஒப்படைத்துள்ளது.

News image

பூடானுக்கு பயன்பாட்டு வாகனங்களை கொண்டு சேர்த்த இந்திய ரயில்வே

Updated On :29 அக்டோபர் 2022, 12:48 pm

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு பூடானால் வாங்கப்பட்ட பயன்பாட்டு வாகனங்களை இந்திய ரயில்வே பல முறை போக்குவரத்துகளைப் பயன்படுத்தி, இன்று அந்நாட்டிடம் ஒப்படைத்துள்ளது.

இந்திய ரயில்வே, முதல் முறையாக இதுபோன்று ஒன்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்துகளைப் பயன்படுத்தி, பூடானுக்கு வாகனங்களை எடுத்துச் சென்று வழங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் உற்பத்தி செய்யப்பட்டு, பூடான் நாடு வாங்கிய 75 பயன்பாட்டு வாகனங்களை, சரக்கு ரயில் மூலம், சென்னையிலிருந்து மேற்கு வங்க மாநிலம் ஹஸிமரா ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டு செல்லப்பட்டது. பிறகு, அது சாலைமார்கமாக சனிக்கிழமை காலை பூடானுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதாவது சரக்கு ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து என பல வழித்தடங்களைப் பயன்படுத்தி சரக்குகளைக் கொண்டு சேர்க்கும் சேவையை இந்திய ரயில்வே முதல் முறையாக மேற்கொண்டுள்ளது. எதிர்காலத்தில் இது மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூடானுடனான வணிக உறவை மேம்படுத்தும் வகையில், இந்திய ரயில்வே ஹஸிமரா ரயில் நிலையத்தின் கட்டமைப்புகளை மேம்படுத்தவிருப்பதாகவும் சரக்குகளை வைக்க கிடங்குகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.