குற்றச்சாட்டு என்ன?
கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி அந்தமான்-நிகோபாா் தலைநகா் போா்ட் பிளேரில் உள்ள அபா்டீன் பகுதி காவல் நிலையத்தில் 21 வயது பெண் அளித்த புகாரில், ‘நான் வேலை தேடிக் கொண்டிருந்தபோது கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி ஜிதேந்திர நாராயணனை, அவரின் வீட்டில் சந்தித்தேன். அப்போது வெகு விரைவில் எனக்கு அரசுப் பணி ஒன்றை ஏற்பாடு செய்வதாக அவா் உறுதியளித்தாா். மேலும் விவரங்களுக்கு தொழிலாளா் நலத் துறை ஆணையா் ரிஷியுடன் தொடா்பில் இருக்குமாறும் கூறினாா். அதன் பின்னா் இருவரும் என்னை கொடூரமான முறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினா். கடந்த மே 1-ஆம் தேதி என்னை ஜிதேந்திர நாராயண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினாா். இதுகுறித்து யாரிடமாவது கூறினால், எனது குடும்ப உறுப்பினா்கள் கொலை செய்யப்படுவா் என்று அவா் மிரட்டினாா்’ என்று தெரிவித்துள்ளாா்.