நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

அந்தமான்-நிகோபார் முன்னாள் தலைமைச் செயலருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள்

அந்தமான் - நிகோபார் தீவுகளின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிதேந்திர நரைன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டை விசாரித்த காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்துள்ளன.

News image

அந்தமான்-நிகோபார் முன்னாள் தலைமைச் செயலருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள்

Updated On :27 அக்டோபர் 2022, 12:42 pm


சென்னை: அந்தமான் - நிகோபார் தீவுகளின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிதேந்திர நரைன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டை விசாரித்த காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்துள்ளன.

ஜிதேந்திர நரைனும், தொழிலாளர் துறை ஆணையாளர் ரிஷி என்பவரும் இணைந்து அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20க்கும் மேற்பட்ட பெண்களை, நரைன் வீட்டில் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சில பெண்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருப்பதும் தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம், 20 வயது பெண் ஒருவர், முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிதேந்திர நரைன் மற்றும் ஆர்எல் ரிஷி ஆகியோர், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்ததைத் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தனக்கு தெரிந்தவர் மூலம் ரிஷி அறிமுகமானார் என்றும், ரிஷி தான், தன்னை நரைன் வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும் அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார். தனக்கு மது கொடுத்து, இருவரும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

புகார் அளித்த பெண் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் தொலைபேசி அழைப்புகள் பதிவானதன் அடிப்படையில், பெண் கூறியது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது, மூன்று பேரின் செல்லிடப்பேசிகளும் ஒரே டவரில் இருந்து இயங்கியிருப்பதும், அவர் சொல்லும் குற்றச்சாட்டு நேரமும் சரியாக இருக்கிறது என்று காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து முதன்மைச் செயலாளரை பணியிடை நீக்கம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.  அதன்பிறகு, பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான செய்திகள் வெளியே வந்தன.

அக்டோபர் 28ஆம் தேதி, சிறப்பு விசாரணைக் குழு முன்பு, நரைன் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு பொய்யானது என்பதை தான் நிரூபிப்பேன் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நரைன் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபர் 17ஆம் தேதி நரைன் பொறுப்பிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நவம்பர் 14ஆம் தேதி வரை அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவருடன் ரிஷியும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.