மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அகல்விளக்கு வாங்கினால் லாட்டரி அடிக்கும்: இது தீபாவளிப் பரிசு

வெளிநாட்டுப் பொருள்களை வாங்காமல் உள்நாட்டில் தயாராகும் அகல் விளக்குகளை வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் 18 கிராம பஞ்சாயத்து நிர்வாகம் ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

News image

அகல்விளக்கு வாங்கினால் லாட்டரி அடிக்கும்: இது தீபாவளிப் பரிசு

Updated On :15 அக்டோபர் 2022, 12:10 pm


கோடா: வெளிநாட்டுப் பொருள்களை வாங்காமல் உள்நாட்டில் தயாராகும் அகல் விளக்குகளை வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் 18 கிராம பஞ்சாயத்து நிர்வாகம் ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

தீபாவளி மற்றும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான அகல் விளக்குகளை செய்யும் குயவர்களின் வாழ்விலும் ஒளியூட்டும் வகையில், 20க்கும் மேற்பட்ட அகல் விளக்குகளை வாங்குவோருக்கு ஒரு சிறப்பு கூப்பன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூப்பன்கள் குலக்கப்பட்டு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குளிர்பதனப் பெட்டி, கடிகாரம், ஹெல்மெட் உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பரிசுப் பொருள்கள் வழங்கப்பட உள்ளன.

வெளிநாட்டு பொருள்களுடன் சரியான முறையில் உள்ளூர் பொருள்கள் போட்டியிட வேண்டும் என்பதற்காக இந்த குலுக்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக கிராம நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து நிர்வாகமும் இதற்காக நிதி ஒதுக்கி, ஒற்றுமையாக இந்த குலுக்கல் பரிசுப் போட்டியை நடத்தவிருப்பதாகக் கூறியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.