நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

அகல்விளக்கு வாங்கினால் லாட்டரி அடிக்கும்: இது தீபாவளிப் பரிசு

வெளிநாட்டுப் பொருள்களை வாங்காமல் உள்நாட்டில் தயாராகும் அகல் விளக்குகளை வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் 18 கிராம பஞ்சாயத்து நிர்வாகம் ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

News image
அகல்விளக்கு வாங்கினால் லாட்டரி அடிக்கும்: இது தீபாவளிப் பரிசு
Updated On :1 பிப்ரவரி 2024, 10:34 am

PTI


கோடா: வெளிநாட்டுப் பொருள்களை வாங்காமல் உள்நாட்டில் தயாராகும் அகல் விளக்குகளை வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் 18 கிராம பஞ்சாயத்து நிர்வாகம் ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

தீபாவளி மற்றும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான அகல் விளக்குகளை செய்யும் குயவர்களின் வாழ்விலும் ஒளியூட்டும் வகையில், 20க்கும் மேற்பட்ட அகல் விளக்குகளை வாங்குவோருக்கு ஒரு சிறப்பு கூப்பன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூப்பன்கள் குலக்கப்பட்டு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குளிர்பதனப் பெட்டி, கடிகாரம், ஹெல்மெட் உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பரிசுப் பொருள்கள் வழங்கப்பட உள்ளன.

வெளிநாட்டு பொருள்களுடன் சரியான முறையில் உள்ளூர் பொருள்கள் போட்டியிட வேண்டும் என்பதற்காக இந்த குலுக்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக கிராம நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து நிர்வாகமும் இதற்காக நிதி ஒதுக்கி, ஒற்றுமையாக இந்த குலுக்கல் பரிசுப் போட்டியை நடத்தவிருப்பதாகக் கூறியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.