பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் வந்த 191 டிரோன்கள்
191 டிரோன்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்திருப்பதாகவும், அதில் 7 சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இது உள்நாட்டு பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


புது தில்லி: பாகிஸ்தானிலிருந்து கடந்த 9 மாதங்களில் மட்டும் 191 டிரோன்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்திருப்பதாகவும், அதில் 7 சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இது உள்நாட்டு பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இதுபோன்ற பாகிஸ்தானின் அத்துமீறல்களை எதிர்கொள்ள நிறுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்புப் படையினர் அளித்த தரவுகளை மத்திய அரசு பகிர்ந்துகொண்டுள்ளது.
அதன்படி, இதுவரை 191 டிரோன்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளன. அதில் 171 டிரோன்கள் பஞ்சாப் செக்டார் பகுதி வழியாகவும், 20 டிரோன்கள் ஜம்மு செக்டார் பகுதி வழியாகவும் பாகிஸ்தானிலிருந்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 191 டிரோன்களில், 7 டிரோன்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது. இந்த டிரோன்கள் மூலம், ஆயுதங்கள், வெடிபொருள்கள், ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்களை பாகிஸ்தானிலிருக்கும் பயங்கரவாத குழுக்கள், இந்திய எல்லைக்குள் ஊடுருவியிருக்கும் பயங்கரவாதிகளுக்கு அனுப்பி வைப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பழனி - கொடைக்கானலுக்கு ரோப் காா்: அறிய வேண்டிய அனைத்து தகவல்களும்
இதையடுத்து, இதுபோன்ற டிரோன்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில், சிறப்பு கண்காணிப்பை மேற்கொள்ளவும், டிரோன்கள் நடமாட்டத்தைத் தடுக்க எடுக்க செய்ய வேண்டிய நடவடிக்கை என்ன என்பது குறித்து உரிய அமைப்புகளிடம் மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை கேட்டுள்ளது. அதேவேளையில், சிறப்பு கண்காணிப்பில் ஈடுபடுமாறு பாதுகாப்புப் படைக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...