தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இது நல்லதல்ல: ராஜதானி எக்ஸ்பிரஸ் மோதி யானை, குட்டி பலி

அசாம் மாநிலம் ஜோர்ஹத் மாவட்டத்தில் காரிகாட்டியா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் யானையும், அதன் குட்டியும் ராஜதானி விரைவு ரயில் மோதி பலியாகின.

News image

இது நல்லதல்ல: ராஜதானி எக்ஸ்பிரஸ் மோதி யானை, குட்டி பலி (கோப்பிலிருந்து..)

Updated On :10 அக்டோபர் 2022, 11:11 am


ஜோர்ஹத்: அசாம் மாநிலம் ஜோர்ஹத் மாவட்டத்தில் காரிகாட்டியா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் யானையும், அதன் குட்டியும் ராஜதானி விரைவு ரயில் மோதி பலியாகின.

இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை இரவு, ஒரு யானைகள் கூட்டம் தண்டவாளத்தைக் கடந்து செல்லும் போது, அதிலிருந்த 22 வயது பெண் யானையும், அதன் 10 மாதக் குட்டியும் ரயிலில் அடிபட்டு இறந்தன.

ஏற்கனவே, இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், இங்கு ரயிலின் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் ரயில் ஓட்டுநர்களுக்கு பல முறை அறிவுறுத்தியும் கூட, எதுவும் செய்யப்படவில்லை என்று ஜோர்ஹத் மாவட்ட வனத்துறை அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்றிரவு ஒரு பெண் யானையும் அதன் குட்டியும் இறந்துள்ளன. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

கடந்த வாரம் புதன்கிழமையும் கோக்ரஜார் மாவட்டத்தில் மின் கம்பியில் சிக்கி மிகப்பெரிய காட்டு யானை பலியானது. யானைகள் பலியாவது நாடு முழுக்க அதிகரித்துள்ளது. இவ்வாறு யானைகள் பல்வேறு விபத்துகளில் சிக்கி,  அதுவும் மனிதர்களின் நடவடிக்கையால் பலியாவது இயற்கைக்கும் இந்த உலகுக்கும் அவ்வளவு நல்லதல்ல என்பதை புரிந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது என்றே கருதப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.