தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஒற்றுமை நடைப்பயணத்தால் என்னுள் நிகழ்ந்த மாற்றம்: மனம் திறந்தார் ராகுல்

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்றது முதல், தனக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மனம் திறந்து பேசியுள்ளார்.

News image

ஒற்றுமை நடைப்பயணத்தால் என்னுள் நிகழ்ந்த மாற்றம்: மனம் திறந்தார் ராகுல்

Updated On :29 நவம்பர் 2022, 9:10 am

இந்தூர்: இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்றது முதல், தனக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மனம் திறந்து பேசியுள்ளார்.

செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் சுமார் 2000 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைப்பயணம் மேற்கொண்டு ஞாயிறன்று இந்தூர் நகருக்குள் நடைப்பயணம் நுழைந்தது.

திங்கள்கிழமை இந்தூரில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தியிடம், இந்த பயணத்தின்போது நீங்கள் மிகவும் திருப்திகரமாக உணர்ந்தது எப்போது என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ராகுல் காந்தி கூறியதாவது, அப்படி நிறைய இருக்கிறது சொல்வதற்கு, ஆனால், நான் ஒரு சில விஷங்களை இங்கே நினைவுகூரலாம். அதில் மிக முக்கியமானது இந்த நடைப்பயணம் தொடங்குவதற்கு முன்பிருந்ததை விட தற்போது எனது பொறுமை அதிகரித்துள்ளது.

இரண்டாவது, என்னை எட்டு மணி நேரம் யாராவது இழுத்தாலும் தள்ளினாலும் கூட எரிச்சலடையமாட்டேன். ஆனால் முன்பெல்லாம் இரண்டு மணி நேரத்தில் என்னை யாராவது இடித்தால் கூட எரிச்சல் வந்துவிடும். 

இந்த நடைப்பயணத்தில் இணைந்து நடந்தீர்களானால், மிகக் கடுமையான வலி ஏற்படும்.  அந்த வலியை தாங்கிக் கொள்ள வேண்டுமே தவிர, இதனை விட்டுவிடக் கூடாது என்ற எண்ணம் பிறக்கும்.

மூன்றாவதாக, மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்கும் திறன் அதிகரித்திருக்கிறது. என்னிடம் யாராவது வந்து பேசினால், தற்போது அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை பொறுமையோடு முழுமையாகக் கேட்க முடிகிறது. இவை அனைத்துமே எனக்கு மிகுந்த பலனளிப்பவை என்று விவரித்துள்ளார்.

இந்த நடைப்பயணத்தைத் தொடங்கிய போது, முன்பு ஏற்பட்ட காயத்தால் முட்டிகளில் வலி ஏற்பட்டது.  அப்போது எனக்கு ஒரு அச்சம் வந்தது. இந்த வலியோடு நடக்க முடியுமா? நடைப்பயணத்தை தொடர முடியுமா என்றெல்லாம். ஆனால், அந்த பயத்தை நான் எதிர்கொண்டேன். தொடர்ந்து நடந்தேன். பிறகு அந்த பயம் நீங்கிவிட்டது.

எப்போதும் நல்ல நிகழ்வுகள் நடக்கும், ஏதேனும் ஒன்று உங்களை துன்புறுத்தலாம், ஆனால் அதனை ஏற்க பழகிக் கொள்ள வேண்டும் என்றும் ராகுல் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.