தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஊடகங்களுக்கு ஒரு தலைப்புச் செய்தியும் தரப்போவதில்லை: சொன்னது யார்?

இன்று ஊடகங்களுக்கு ஒரு தலைப்புச் செய்தியையும் நான் தரப்போவதில்லை என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

News image
ஊடகங்களுக்கு ஒரு தலைப்புச் செய்தியும் தரப்போவதில்லை: சொன்னது யார்?
Updated On :1 பிப்ரவரி 2024, 10:58 am

PTI

இந்தூர்: இன்று ஊடகங்களுக்கு ஒரு தலைப்புச் செய்தியையும் நான் தரப்போவதில்லை என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மேலும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே  மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இருவருமே கட்சியின் சொத்துகள் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கேரள மாநிலம் வயநாடு மக்களவை உறுப்பினர் ராகுல், அமேதியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து பிறகு யோசிக்கலாம், தற்போதைக்கு எனது கவனம் முழுக்க இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில்தான் உள்ளது என்றார்.

ராஜஸ்தானில் நிலவும் போட்டி குறித்து கேட்கப்பட்டதற்கு, இது எனது பயணத்துக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. காங்கிரஸ் கட்சிக்கு இருவருமே சொத்துகள்தான் என்றும் கூறினார்.

மீண்டும் அமேதியில் போட்டியிடுவீர்களா? என்று கேள்வி எழுப்பிய செய்தியாளரைப் பார்த்து, இன்று நான் எந்த ஒரு தலைப்புச் செய்தியும் உங்களுக்குத் தரப்போவதில்லை. எனது முழுக் கவனமும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் மீதே உள்ளது. இந்தக் கேள்வி இன்னும் ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு வரும் விவகாரம் என்று கூறினார்.

மேலும், வேலைவாய்ப்பின்மை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, இந்தியாவின் ஒட்டுமொத்த வளமையும், மூன்று அல்லது நான்கு தொழிலதிபர்களின் கைகளில்தான் உள்ளது.  காங்கிரஸ் சிறு தொழில்களை உருவாக்கும் பணியில் கவனம் செலுத்தி, அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் என்றும் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.