திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

இதுவரை கரோனா பாதிக்கப்படாதவரா? நீங்கள் அதிர்ஷ்டசாலி மட்டுமல்ல..

நீங்கள் ஒருவேளை இதுவரை கரோனா பாதிக்கப்படாதவராக இருந்தால்? அது நிச்சயம் அதிர்ஷ்டம் மட்டுமல்ல, அதற்கும் ஒருபடி மேல் என்கிறார்கள்.

News image

இதுவரை கரோனா பாதிக்கப்படாதவரா? நீங்கள் அதிர்ஷ்டசாலி மட்டுமல்ல..

Updated On :19 மே 2022, 7:04 am


லண்டனில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் குழுவினர் கூறுகையில், நீங்கள் ஒருவேளை இதுவரை கரோனா பாதிக்கப்படாதவராக இருந்தால்? அது நிச்சயம் அதிர்ஷ்டம் மட்டுமல்ல, அதற்கும் ஒருபடி மேல் என்கிறார்கள்.

எங்கும் நீக்கமற நிறைந்திருந்த கரோனாவிலிருந்து ஒரு மனிதர் பாதிக்கப்படாமல் இருக்க அவரது உடலில் இருக்கும் ஏதோ ஒரு எதிர்ப்பாற்றலை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியுமா? இல்லை அதனை வெறும் அதிர்ஷ்டம் என்று மட்டும் கூறிவிட முடியுமா? பிரிட்டனில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு முறையாவது கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உண்மையிலேயே பதிவான எண்ணிக்கையை விடவும், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும். எந்த அறிகுறியும் இல்லாமல், அல்லது லேசான அறிகுறிகளுடன் கரோனா வந்திருக்கலாம் என்பது அறிவியல் பூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றுதான்.

ஆனால், கரோனா வந்தும் அறிகுறி இல்லாதவர்களும், கரோனா பாசிடிவ் என்று பரிசோதனை முடிவில் தெரிவிக்கப்படாதவர்களும் இதுவரை கரோனா பாதிக்கப்படாதவர்களின் கணக்கில்தான் வருவார்கள்.

ஓரிரு நாள்கள் என்று இல்லாமல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்த கரோனா பேரிடரில் இதுவரை ஒருவர் கரோனா பாதிப்பில் சிக்காமல் இருக்கிறார் என்றால், அவர்களுக்கு இருக்கும் நோய் எதிர்ப்பாற்றல் எப்படிப்பட்டது?

பல அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டாலும், இதற்கு எளிதான ஒரு பதில் இல்லை. இது ஏதோ சினிமாக்களில் வரும் சூப்பர் பவர் நபர்களைப் போல என்றும் கூறிவிட முடியாது.

ஒருபுறம் அறிவியலும் மறுபுரம் அதிர்ஷ்டமும் என இணைந்து செய்த வேலையாகத்தான் இருக்க முடியும். 

வாருங்கள் அதை எப்படி என்று பார்க்கலாம்.

கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள சிலர் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளலாம். மற்றவர்களைக் காட்டிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படலாம். ஆனால், இறுதியில் அவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

அதிகமாக பரவும் திறன் கொண்ட ஒமைக்ரான் வகை கரோனாவும் பரவத் தொடங்கியிருந்தது. ஒருவர் வேலைக்கோ பள்ளிக்கோ கடைக்கோ போகும் போது அவர் அருகில் கரோனா வைரஸ் பாதித்த ஒருவர் வந்திருக்கவே மாட்டார் என்று ஒருபோதும் கூற முடியாது.

சிலர் மருத்துவமனையிலேயே பணியாற்றியிருப்பார்கள், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு கரோனா பாதிப்பும் உறுதியாகியிருக்கும், ஆனால், அப்படியிருந்தாலும் சிலருக்கு கரோனா பாசிடிவ் ஆகியிருக்காது.

எனவே, கரோனா தொற்று உறுதி செய்யப்படுவதிலும், அதன் பாதிப்பு தீவிரமடைவதிலும், ஒருவரது வயது மற்றும் அவரது மரபியல் போன்றவை மிக முக்கியக் காரணிகளாக அமைவதை இதுவரை நடந்த பல ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. சிலருக்கு மிகச் சிறந்த வாழ்முறையும் உதவி செய்திருக்கிறது.

சிலருக்கு விட்டமின் டி பற்றாக்குறை கரோனா தொற்றுக்கு காரணமாக அமைகிறது. போதிய உறக்கமின்மையும் கூட.

கரோனா தீவிரமடைந்தவர்களில் 20 சதவீதம் பேருக்கு மரபியல் காரணங்கள் இருந்ததும் தெரிய வந்துள்ளது.

அவ்வளவு ஏன்? 
ஒரு ஆராய்ச்சிக்காக தன்னார்வலர்களின் மூக்குப் பகுதியில் இருந்த செல்கள் பிரித்தெடுக்கப்பட்டு ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது. பிளாஸ்டிக் குப்பிகளில் அந்த செல்களுடன் வைரஸ்களை சேர்த்தபோது அந்த செல்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன என்று ஆராய்ந்தோம். 

இதில் ஒரே ஒருவரின் செல்லில் மட்டும் கரோனா வைரஸ் வளரவேயில்லை. எனவே, இப்படி பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இதுதான் என்று ஒன்றை குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாது. சரி இந்த எதிர்ப்பாற்றல் எத்தனை நாள்களுக்கு இருக்கும் என்றும் கூறமுடியாது.

இந்த நாள்வரை கரோன தொற்றிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்றால், உண்மையிலேயே கரோனாவை எதிர்க்க உங்கள் உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பாற்றல் இருக்கலாம். அல்லது அது வெறும் ஒரு அதிர்ஷ்டமாகக் கூட இருக்கலாம். இரண்டுமாகக் கூடஇருக்கலாம்.

எனவே, தற்போது இருக்கும் அதே எச்சரிக்கையுடன் தொடருங்கள். ஏனென்றால் வைரஸ் பற்றி நாம் அறிந்து கொண்டது குறைவுதான். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.