திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

பங்குச் சந்தையில் எல்ஐசி பங்குகள் விற்பனை தொடக்கம்

நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்குகள் விற்பனை தேசிய பங்குச் சந்தையில் இன்று தொடங்கியிருக்கிறது.

News image

பங்குச் சந்தையில் எல்ஐசி பங்குகள் விற்பனை தொடக்கம்

Updated On :17 மே 2022, 6:18 am

நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்குகள் விற்பனை தேசிய பங்குச் சந்தையில் இன்று தொடங்கியிருக்கிறது.

நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்குகள் பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை பட்டியலிடப்பட்டுள்ளது. எல்ஐசி பங்குகளை ஐபிஓ முறையில் வாங்கியவர்கள், இனி தேசிய பங்குச் சந்தையில் விற்பனை செய்யலாம்.

ஐஓபி விற்பனையின்போது ஒரு எல்ஐசி பங்கின் விலை ரூ.949 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், முதல் நாள் பங்குச் சந்தை வர்த்தகத்தில், இன்று ரூ.872 என விலை குறைந்து விற்பனையாகிறது.

எல்ஐசியின் பொதுப் பங்கு வெளியீடு, மே 4-ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி வரை 6 நாள்கள் நடைபெற்றது. எதிா்பாா்த்ததைக் காட்டிலும் எல்ஐசியின் பங்கு வெளியீட்டுக்கு முதலீட்டாளா்களிடமிருந்து அதிக வரவேற்பு கிடைத்தது. விற்பனைக்கு வந்த பங்குகளின் எண்ணிக்கையை காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக பங்குகள் வேண்டி முதலீட்டாளா்களிடமிருந்து விண்ணப்பங்கள் குவிந்தன.

பங்குகளை வாங்க போட்டி அதிகமானதால் முதலீட்டாளா்களுக்கு கோரியதைவிட குறைவாகவே பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தப் பணிகள் மே 12-ஆம் தேதி முடிவடைந்ததையடுத்து எல்ஐசியின் பங்குகள் பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை பட்டியலுக்கு வந்துள்ளது.

எல்ஐசியின் 3.5 சதவீத பங்குகளை அதிகபட்ச விலையான ரூ.949-க்கு விற்பனை செய்த வகையில் மத்திய அரசு ரூ.20,557 கோடியை திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.