தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

காங். எம்எல்ஏ மகன் மீது பாலியல் வழக்கு: பிரியங்காவுக்கு ரயில் டிக்கெட் அனுப்பிய பாஜக

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கையடுத்து, பிரியங்கா காந்தி வதேராவுக்கு பாஜக சார்பில் ரயில் டிக்கெட் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

News image

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி

Updated On :28 மார்ச் 2022, 7:46 am


ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏவின் மகன் மற்றும் அவனது 4 நண்பர்கள, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கையடுத்து, பிரியங்கா காந்தி வதேராவுக்கு பாஜக சார்பில் ரயில் டிக்கெட் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேராவுக்கு, பாஜக மாநில செயலாளரும், நாடாளுமன்ற முன்னாள் செயலாளருமான ஜிதேந்திர கோத்வால், ரயில் டிக்கெட்டை அனுப்பி வைத்துள்ளார்.

மேலும், ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏவின் மகன் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால், விரைவாக ராஜஸ்தானுக்கு வருமாறு பிரியங்கா காந்திக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவின் மகனால் சிறுமி  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். எம்எல்ஏவின் அதிகாரத்துக்கு எதிராக போராடும் சக்தி அந்த சிறுமிக்கு இருக்காது என்றும் அவர் சுட்டுரையில் பதிவிட்டு பிரியங்கா காந்தியையும் டேக் செய்துள்ளார்.

மேலும், பிரியங்கா காந்தி அவர்கள், நான் உங்களுக்கு ரயில் டிக்கெட் அனுப்பியுள்ளேன். உடனடியாக ஜெய்ப்பூருக்கு கிளம்பி வாருங்கள். இங்கேயும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களாலும் போராட முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். அந்த ரயில் டிக்கெட்டையும் அவர் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.