தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பூஜ்யம், பூஜ்யம், பூஜ்யம்.. முதல் முறையாக தாராவியில்

நாட்டில் கரோனா பேரிடர் தொடங்கிய நாள் முதல், தாராவில் கடந்த வியாழக்கிழமை முதல்முறையாக கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பூஜ்யமாக இருந்தது.

News image

பூஜ்யம், பூஜ்யம், பூஜ்யம்.. முதல் முறையாக தாராவியில்

Updated On :25 மார்ச் 2022, 12:47 pm


மும்பை: நாட்டில் கரோனா பேரிடர் தொடங்கிய நாள் முதல், தாராவில் கடந்த வியாழக்கிழமை முதல்முறையாக கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பூஜ்யமாக இருந்தது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் மக்கள் நெரிசல் மிகுந்து காணப்பட்டதால், அங்கு கரோனா பரவல் கடுமையாக இருந்த நிலையில், நேற்று புதிதாக கரோனா பாதிப்பும், பலியும் கூட இல்லாத நாளாக அமைந்தது.

மும்பை மாநகராட்சி வெளியிட்ட புள்ளி விவரத்தில், தாராவியில் மட்டும் இதுவரை 8,233 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 419 பேர் பலியாகியுள்ளனர்.

தாராவியில் கரோனா நோயாளிகள் இல்லாத நிலையில், தாதர் மற்றும் மாஹமில் தலா ஒரு கரோனா நோயாளி இருக்கிறார்கள்.

இன்று முற்றிலும் பூஜ்யம், பூஜ்யம், பூஜ்யம் நாளாக அமைந்துவிட்டது. அப்பகுதி சுகாதார அதிகாரிகளும், உள்ளூர் மக்களும் எடுத்த கடுமையான நடவடிக்கையால்தான் இது நிகழ்ந்துள்ளது. இங்கு கரோனாவைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால் அதை செய்துமுடித்துள்ளோம். மறுபக்கம் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தியிருக்கிறோம் என்கிறார் நகராட்சி ஆணையர் கிரண்.

மிகக் குறுகிய பகுதியில் சுமார் 7 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இங்கு 5,000 சிறு தொழில்கள், தொழிற்சாலைகள், குடிசைத் தொழில்கள் நடக்கின்றன. அங்கு 2020 ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 2020ஆம் ஆண்டில் தாராவிதான் கரோனா பரவலில் மிக முக்கிய அபாயப் பகுதியாக இருந்தது. தற்போது அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.