தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

முதுகு தண்டுவட சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கிடைத்தது மறுவாழ்வு

முதுகு தண்டுவட சிதைவால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவனுக்கு இந்திய முதுகுதண்டுவட காயங்களுக்கான சிகிச்சை மைய மருத்துவர்கள், மறுவாழ்வு அளித்துள்ளனர்.

News image

முதுகு தண்டுவட சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கிடைத்தது மறுவாழ்வு

Updated On :17 மார்ச் 2022, 12:33 pm


புது தில்லி: முதுகு தண்டுவட சிதைவால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவனுக்கு இந்திய முதுகுதண்டுவட காயங்களுக்கான சிகிச்சை மைய மருத்துவர்கள், மறுவாழ்வு அளித்துள்ளனர்.

இரண்டு முறை நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையின் பலனாக, சிறுவன் ஆக்ஸிஜன் உதவியின்றி வாழவும், தானாகவே நடக்கவும் வழியேற்றபட்டுள்ளது.

பிறந்தது முதலே முதுகு தண்டுவட சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, கடந்த மூன்று ஆண்டுகளாக மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டது. முதுகு தண்டுவட சிதைவால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, எங்குச் சென்றாலும் ஆக்ஸிஜன் சிலிண்டரின் உதவியோடு செல்ல வேண்டிய சிக்கல் இருந்தது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹிம்மேஷ்வர், கைபோஸ்கோலியோஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு 12 வயதாகும் போது நோய் தீவிரமடைந்தது. நிற்கும் போது இவரது நிலைமை மிகவும் மோசமடைந்தது. நேராக நடக்கவும் முடியாமல் அவதிப்பட்டு வந்தார் என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அங்குர் நந்தா தெரிவித்துள்ளார்.

இவரது ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்ஸிஜன் அளவானது 48 சதவீதம்தான் இருந்தது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக இவர் ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு முதுகு தண்டுவட சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையாகும், முதுகு தண்டுவடத்தை சீரமைக்கும்போது, அதனுடன் இணைந்த நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டால் கால்கள் செயலிழக்கும் அபாயம் கூட நேரிடலாம். இந்த அறுவை சிகிச்சையை சவாலாக ஏற்று, அவரது எலும்புகள் மற்றும் இடுப்பு எலும்புகளில் உலோக பின் மற்றும் வளையங்கள் பொருத்தி, முதுகெலும்பை நேர் செய்யும் அறுவை சிகிச்சை  மேற்கொள்ளப்பட்டது.

இப்படியே அவர் 2 மாதங்கள் வைக்கப்பட்டிருந்து, நுரையீரல் பயிற்சிகள் அளிக்கப்பட்டு பிறகு, அவருக்கு மூச்சு விடுவதில் சிக்கல் குறைந்து, தானாகவே நடக்கவும் முடிந்தது. இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சையும் முடிந்து, சிறுவனுக்கு புது வாழ்வு கிடைத்துள்ளது. தற்போது அவர் ஆக்ஸிஜன் உதவியின்றி, இயல்பான வாழ்க்கையை வாழ முடிகிறது என்றார் மருத்துவர் நந்தா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.