தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தேர்தல் குறித்து பெட்டிங் வைத்து பைக்கை இழந்த இளைஞர்: அகிலேஷ் செய்த ஆச்சரியம்

உத்தரபிரதேச தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து பெட்டிங் வைத்து, தனது பைக்கை இழந்த இளைஞருக்கு, புதிய பைக்கை வாங்கிக் கொடுத்துள்ளார் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்.

News image

அகிலேஷ் யாதவ்

Updated On :16 மார்ச் 2022, 12:13 pm


லக்னௌ: உத்தரபிரதேச தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து பெட்டிங் வைத்து, தனது பைக்கை இழந்த இளைஞருக்கு, புதிய பைக்கை வாங்கிக் கொடுத்துள்ளார் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்.

உத்தர பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த அவதேஷ் குஷ்வாஹா என்பவர், தனது பக்கத்துவீட்டுக்காரரிடம் ஒரு பெட் கட்டியுள்ளார். அதில், உத்தர பிரதேச தேர்தலில் சமாஜவாதி கட்சிதான் வெற்றி பெறும், இல்லையென்றால் நான் எனது பைக்கைக் கொடுத்து விடுககிறேன் என்று. அதற்கு பக்கத்துவீட்டுக்காரர் பிலாடாவும், பாஜகதான் வெற்றி பெறும் இல்லையென்றால் தான் தனது ஆட்டோவை கொடுத்து விடுவதாகக் கூறியுள்ளார்.

இதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. இருவரும் சேர்ந்து 100 ரூபாய் மதிப்புள்ள பத்திரத்தை வாங்கி வந்து 6 பேரின் கையெழுத்துடன் இதனை எழுதி கையெழுத்திட்டுள்ளனர்.

மார்ச் 10ஆம் தேதி தேர்தல் வெற்றி அறிவிக்கப்பட்டது. பத்திரத்தில் சொன்னபடி அவதேஷ் தனது பைக்கை பிலாடாவுக்கக் கொடுத்துவிட்டார். இந்த சம்பவத்தை பத்திரத்துடன் பக்கத்து வீட்டைச் சேர்ந்த மற்றொருவர் அவதேஷ் தனது வாழ்வாதாரத்தையே இழந்துவீட்டதாகக் கூறி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துவிட்டார்.

அவ்வளவுதான் இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிட, உடனடியாக அவதேஷை சமாஜவாதி கட்சி அலுவலகத்துக்கு அழைத்து வந்த கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஒரு லட்சம் ரூபாய்க்கு காசோலையை வழங்கி, புதிய பைக் வாங்கிக் கொள்ளுமாறும், இனி எதிர்காலத்தில் இதுபோல பெட்டிங்கில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தி அனுப்பி வத்தார்.

அவதேஷ், சின்ன சின்ன மின்சாரப் பொருள்களை பைக்கில் வைத்து வீடு வீடாகச் சென்று விற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.