தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

விவாகரத்துக் கோரிய மனைவியை வீச்சரிவாளால் வெட்டியவர் தலைமறைவு; பெண் கவலைக்கிடம்

கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில், முஸ்லிம் பழக்க வழக்கங்களை பின்பற்றச் சொல்லி காதல் கணவர் துன்புறுத்தியதால், விவாகரத்துக் கோரிய மனைவியை, அரிவாளால் வெட்டிய நபரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

News image

விவாகரத்துக் கோரிய மனைவியை வீச்சரிவாளால் வெட்டியவர் தலைமறைவு; பெண் கவலைக்கிடம்

Updated On :11 மார்ச் 2022, 11:30 am


கடக்: கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில், முஸ்லிம் பழக்க வழக்கங்களை பின்பற்றச் சொல்லி காதல் கணவர் துன்புறுத்தியதால், விவாகரத்துக் கோரிய மனைவியை, அரிவாளால் வெட்டிய நபரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

தலையில் 23 முறை வீச்சரிவாளால் வெட்டுக்காயமடைந்த அபூர்வா ஆனந்த் புராணிக் என்ற அந்தப் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை லவ் ஜிகாத் எனற் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று இந்து அமைப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

காவல்துறையினர் இதுபற்றி கூறுகையில், அபூர்வா (26), தனது கணவர் மொஹம்மது ஷிரூர் (30), இந்துவாக இருந்து முஸ்லிமாக மதம் மாறிய தன்னை, முஸ்லிம் பழக்க வழக்கங்களை கடுமையாக பின்பற்றுமாறு துன்புறுத்தியதாலும், கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி 3 பிள்ளைகள் இருப்பது தெரிய வந்ததாலும், கணவரிடமிருந்து பிரிந்து தனது மகனுடன், தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

இதையடுத்து, விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய நிலையில், அபூர்வாவை வீச்சரிவாளால் வெட்டிவிட்டு, மொஹம்மத் தப்பியோடியுள்ளார். அபூர்வாவின் தலையில் மட்டும் 23 முறை வீச்சரிவாளால் வெட்டப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், தோள்பட்டை, முகம், கைகளிலும் கடுமையான வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. உயிருக்கு ஆபத்தான நிலையில்அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெற்றோருக்கு ஒரே மகளான அபூர்வா, கல்லூரியில் படிக்கும் போதே ஆட்டோ ஓட்டும் மொஹம்மதுவை காதலித்து 2018ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டுள்ளார். பிறகு அவர் முஸ்லிம் மதத்துக்கு மதம் மாறியுள்ளார். திருமணமாகி சில ஆண்டுகளில், மொஹம்மது, அபூர்வாவை புர்கா அணியுமாறும், முஸ்லிம் பழக்க வழக்கங்களை பின்பற்றுமாறும் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில்தான் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தது அபூர்வாவுக்குத் தெரிய வந்தது.

இதையடுத்து அவர் கணவரிடமிருந்து பிரிந்து வந்து விவாகரத்துக் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.